மகாராஷ்டிரத்தில் ஜூன் 1ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல் படுத்தி வருகிறனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் ஜூன் 1ஆம் தேதி காலை 7 மணிவரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வெளி மாநிலங்களிலிருந்து வரும் சரக்கு லாரிகளில் 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அவர்கள் 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது