மகாராஷ்டிராவில் "டெல்டா பிளஸ் கொரோனாவால் 80 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாட்டிலேயே அதிக டெல்டா பிளஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் இதுவரை 20 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இணை நோய்களுடன் சிகிச்சை பெற்று வந்த மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மகாராஷ்டிரா அரசு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. இதுவே மகாராஷ்டிராவில் முதல் டெல்டா பிளஸ் உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நேற்று மத்திய பிரதேசத்தில் ஒருவர் டெல்டாபிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது