india

img

மகாராஷ்டிராவில் லாரி கவிழ்ந்த விபத்தில் 12 பேர் பலி

மகாராஷ்டிராவில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் இன்று நெடுஞ்சாலை திட்டப்பணிகளுக்காக லாரியில் தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது எதிரே வந்த கார் மீது லாரி மோதாமல் தவிர்க்க ஓட்டுநர் லாரியை திருப்பிய போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் சென்ற 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அம்மாநில காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;