புதுதில்லி, மார்ச் 6- கடன் வரம்பை குறைத்த ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த வழக்கில் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. கேரளம் உரிமை கோரிய கடன் தொகை ரூ.13,608 கோடியை உடனடியாக விடு விக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கேரளம் எழுப்பியுள்ள கூடுதல் கோரிக்கைகள் குறித்து, வியாழக்கிழமைக் குள் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்; கேர ளத்தின் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்; வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடன் வாங்குவது தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் விவாதிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. நீதிமன்றம் அதை பரிசீலித்து பின்னர் உரிய உத்தரவை பிறப்பிக்கும். அடுத்த நிதி யாண்டிலும் இதேபோன்ற நெருக்கடி ஏற்படும் முன் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கும். மேலும் இது நீதிமன்றத்தின் பரி சீலனையில் உள்ள விவகாரம் என்பதால், இது குறித்து பகிரங்க அறிக்கைகளை வெளி யிட வேண்டாம் என்றும் தலைவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளத்தின் வாதம் நியாயமானதாக இருந்ததால் ஒன்றிய அரசு பணிய வேண்டிய தாயிற்று. நிதி நெருக்கடி தீரும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து கேரள நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் புத னன்று (மார்ச் 6) திருவனந்தபுரத்தில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: இந்த தீர்ப்பு மாநிலத்தின் நிதி நெருக்க டிக்கு உடனடித் தீர்வு காண உதவும். இது மார்ச் வரையிலான செயல்பாடுகளுக்குத் தேவையான தொகையாகும். வழக்கமாக கிடைக்க வேண்டிய தொகை மதிப்பிடப் படுகிறது.
கடன் பெறுவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனைக்கு ஒன்றிய, மாநில அரசுகள் பேசி தீர்வு காண வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி யுள்ளது. இது தொடர்பாக மேலதிக கருத்துக் கள் எதனையும் வெளியிட வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார். கடன் வரம்பு குறைப்பு, ஜிஎஸ்டி பங்குத் தொகை மறுப்பு, நிவாரணத் தொகைகள் மறுப்பு, ரேசன் ஒதுக்கீடு வெட்டு உள்பட கேரளத்திற்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் மாநில உரிமைகள் பறிப்பு க்கு எதிராக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் கேரள அரசு தில்லியில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.