india

img

ரயில் பயணத்திற்கு தடுப்பூசி கட்டாயம்

மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகத்திற்கு ரயில் பயணம் மேற்கொள்ள தடுப்பூசி கட்டாயம் என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறையத் துவங்கி உள்ளது. இதையடுத்து நாட்டின் பல மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவிற்கு ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் கட்டாயம் முதல் தடுப்பூசி அணிந்திருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் 72 மணி நேரத்திற்கு மிகாமல்  ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 
 

;