india

img

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி - இன்று மாலை 4மணி முதல் முன்பதிவு தொடக்கம்!

18 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இன்று மாலை 4மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்தியர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முன்பதிவு இன்று மாலை 4மணி முதல் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பதிவு செய்யும் முறை 
1. cowin.gov.in என்ற இணையப்பக்கத்திற்குச் செல்லவும்.
2. பதிவுசெய்ய 'register/sign in yourself'என்பதை க்ளிக் செய்யவும்.
3. உங்களுடைய 10 இலக்க மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணை டைப் செய்யவும்.
4. உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP-யை நிரப்பவும்.
5. உங்களுடைய விவரங்களை பதிவுசெய்தபிறகு, தடுப்பூசி போட்டுக்கொள்ள நீங்கள் விரும்பும் தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிடவும்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டபிறகு, உங்களுக்கு குறிப்பு ஐடி( Reference ID) ஒன்று கொடுக்கப்படும். அதைவைத்து, தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.

பதிவுசெய்ய தேவையான ஆவணங்கள்:
ஆதார் அட்டை, பான் காடு, வாக்காளர் அடையாள அட்டை, ஒட்டுநர் உரிமம், சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை அடையாள அட்டை, எம்.பி/எம்.எ.ஏ/எம்.எல்.சி வழங்கிய அடையாள அட்டை, பாஸ்போர்ட், பாஸ்புக்(வங்கி/ அஞ்சலகம்), ஓய்வூதிய அட்டை, மத்திய / மாநில அரசு / பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சேவை அடையாள அட்டை
போன்ற மேற்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று அவசியம்.

ஆரோக்ய சேது செயலிமூலம் பதிவுசெய்யும் முறை
ஆரோக்ய சேது செயலியின் முன்பக்கத்திலுள்ள கோவின் பக்கத்தை க்ளிக் செய்யவும் 
 தடுப்பூசி முன்பதிவை செலக்ட் செய்யவும்
 மொபைல் எண்ணை டைப் செய்யவும் 
 ஓடிபியை நிரப்பவும். 
 சரிபார்க்க(Verify)வை அழுத்தவும் 
அங்கிருந்து தடுப்பூசி முன்பதிவு பக்கத்திற்கு சென்றுவிடும். பிறகு கோவின் செயலிக்கு குறிப்பிட்டதைப் போன்றே பதிவுசெய்யவும்.

தடுப்பூசி போடும் மையத்திற்கு செல்லும் போது அடையாள அட்டையை கொண்டு செல்லுங்கள்
ஆன்லைன் மூலம் உங்களுக்கு அருகிலிருக்கும் தடுப்பூசி மையத்தை தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள், நேரத்தில் தடுப்பூசி போடும் மையத்திற்கு செல்ல வேண்டும்.
தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்பு 30 நிமிடங்கள் அங்கேயே காத்திருக்க வேண்டும்.
இந்த 30 நிமிடங்களில் ஏதேனும் பக்க விளைவுகள் தென்பட்டால் உடனே மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
தடுப்பூசி மையத்தில் இருந்து வெளியே சென்ற பின்னர் உடலில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது பக்க விளைவுகள் ஏற்பட்டால் +91-11-23978046 (இலவச எண் - 1075) என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவருமே 2வது டோஸ் தடுப்பூசியையும் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும். முதல் டோஸ் செலுத்திக்கொண்ட 28 நாட்களிலிருந்து 42 நாட்களுக்குள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் எடுத்திருக்கவேண்டும் என கோவின் இணையதளம் கூறுகிறது.

;