india

img

பாஜக எம்எல்ஏவால் பாதிக்கப்பட்ட உன்னாவ் பெண் கவலைக்கிடம்

எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை

புதுதில்லி,ஆக.7- ரேபரேலி அருகே பாஜக எம்எல்ஏவால் விபத்துக்குள்ளாக்கப் பட்டு படுகாயம் அடைந்த உன்னாவ் பெண்ணின் உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்து வமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் கைது செய்யப்பட்டார்.  இந்த நிலையில் பாதிக்கப்பட்ட உன்னாவ் பெண் அவரது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர் மகேந்திரசிங் உள்ளிட்ட 4 பேர் கடந்த வாரம் காரில் சென்று கொண்டிருந்தனர். ரேபரேலி அருகே சென்றபோது வேகமாக வந்த லாரி இவர்களது கார் மீது பயங்கரமாக மோதியது.

இதில் உன்னாவ் பெண்ணும், அவரது வழக்கறிஞரும் படுகாயமடைந்தனர். பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பலியாகினர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து உன்னாவ் பெண்ணும், அவரது வழக்கறிஞரும் மேல் சிகிச்சைக்காக தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டனர். இதற்கிடையே உன்னாவ் பெண்ணின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், உன்னாவ் பெண் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர்  செயற்கை சுவாசத்துடன் கூடிய உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.  உன்னாவ் பெண்ணுடன் விபத்தில் சிக்கிய அவரது வழக்கறிஞர் மகேந்திர சிங்கின் உடல்நிலையும் கவலைக்கிட மாக உள்ளது. மயக்க நிலையில் இருக்கும் அவருக்கு திறன் மிகுந்த உயிர் காக்கும் கருவிகள் உதவி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;