india

img

புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து லாரி ஓட்டுநர்கள் போராட்டம்! 

ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் மற்றும் லாரி உரிமையாளர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் படி, லாரி ஓட்டுநர் விபத்து ஏற்படுத்திவிட்டுத் தப்பி சென்றால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இந்த நிலையில், ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் மற்றும் லாரி உரிமையாளர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மேலும், வட மாநிலங்களில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளில் குவிந்துள்ளனர்.

இந்த போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த ஒன்றிய அரசு தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஓட்டுநர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. அதன்படி, இன்று இரவு 7 மணி அளவில் அகில இந்திய மோட்டார் வாகன கார்ப்பரேஷன் சங்கத்தினர் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், ஒன்றிய உள்துறை செயலாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.