india

img

அதானிக்கு எதிரான போராட்டத்தை புறக்கணிக்கும் திரிணாமுல்

பிரதமர் மோடியின் நெருங்கிய நண்ப ரான அதானியின் பிரம்மாண்ட முறைகேடு, சம்பல் வன்முறை, மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிவ சேனா (உத்தவ்), ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஆவேசமாக போராட்டம் நடத்தி வருகின்றன. “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்களின் கிளர்ச்சியால் பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வராமல் ஓடி ஒளிந்து வருகிறார்.

இந்நிலையில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதானி விவகாரத்தைக் காட்டிலும் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என கூறி, அதானிக்கு எதிரான போராட்டத்தில் இருந்து விலகியுள்ளது. 

ஆனால் உண்மையில் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்காக திரி ணாமுல் கட்சி அதானிக்கு எதிரான போராட்டத்தில் இருந்து விலகவில்லை ; “இந்தியா” கூட்டணியின் தலைமை பொறுப்புத் தொடர்பாக தான் திரி ணாமுல் விலகியுள்ளது  என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். 

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் தோல்வி காரணமாக “இந்தியா” கூட்ட ணியின் தலைமை பொறுப்பை தனக்கு தர  வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்தார். மம்தா பானர்ஜியின் இந்த கோரிக்கைக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மட்டுமே ஆதரவு தெரிவித்தார். காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி கள் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.