பெண் என்பவள் அனைத்து உறவுகளையும் ஒன்றாக வைத்துக்கொள்வதாலும், அனைத்துத் துறைகளி லும் ஆண்களை விட பெண்களின் பங்களிப்பு அதிகமாக வும், வீட்டைக் கவனித்துக்கொள்வதோடு, அலுவலகப் பொறுப்புகளையும் சிறப்பாகச் செய்வதோடு மட்டுமல்லாமல், ராணுவம், விளையாட்டு என ஒவ்வொரு நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களும் முக்கிய பங்கு வகிக்கும் சூழலில், பெண்ணின் பெருமைகளை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று உலக மெங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விளையாட்டு உலகில், விளையாட்டுப் போட்டிகளுடன் வெள்ளியன்று (மார்ச் 8) சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படு கின்றன. அதாவது விளையாட்டுப் போட்டிகளுடன் சிறப்பு கலைநிகழ்ச்சிகள், பெண்கள் மற்றும் பெண் குழந்தை களுக்கு இலவச மைதான நுழைவு, சிறப்பு விருந்து என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் சர்வதேச விளையாட்டு உலகில் வெள்ளியன்று பெண்களுக்கென்று தனி திரு விழா கொண்டாடப்படுகிறது.
விளையாட்டு உலகில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்ட அரங்கேற்றம் ஐரோப்பா கண்டத்தில் வெகு விமர்சியாக நடைபெறும் என்ற நிலையில், இந்தியாவில் வடமாநிலங்களை விட தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் பள்ளிகள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் சிறப்பு விழாக்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
டபிள்யு.பி.எல் தொடரில் இம்முறை பெண்களுக்கு இலவச அனுமதி ரத்து
கடந்த ஆண்டு டபிள்யு.பி.எல் (WPL - Women’s Premier League) டி-20 லீக் தொடரில் சர்வதேச தினத்தன்று பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இம்முறை மகளிருக்கான இலவச அனுமதி தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. முக்கியமாக மகளிர் தினம் தொடர்பாக எவ்வித விழாவையும் டபிள்யு.பி.எல் நிர்வாகம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.