india

img

காலத்தை வென்றவர்கள்

நாகர்கோவில் அருகில் உள்ள பூதப் பாண்டியில் 1907 ஆகஸ்ட் 21 இல் பிறந்த ஜீவானந்தம் நாடு போற்றும் பொது வுடைமை தலைவராக இறவாப் புகழ்பெற் றார். இளம் வயதிலேயே தீண்டாமைக் கொடுமைக்கும் வருணாச்சிரம அநீதிக்கும் எதிராக கிளர்ந்தெழுந்தார்.

காந்திஜியின் பெயரால் ஆசிரமம் அமைத்து செயல்பட்டார். அவரால் நாட்டின் சொத்து என்று போற்றப்பட்டார். விடுதலைப் போரில் முன்னின்றார். முதலில் காங்கிரஸ் கட்சியிலும் பின்னர், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும், நிறைவாக கம்யூனிஸ்ட் கட்சியிலும் செயல்பட்டார். தந்தை பெரியாருடன் இணைந்து சுயமரியாதை சமதர்ம இயக்கம் தொடங்கினார்.

பின்னர் முழுவதுமாக கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தன் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்ட் லட்சியங்களுக்காகப் பாடுபட்டார். தமிழ் இலக்கியவாதியாக, கவிஞராக, சிறந்த பேச்சாளராக, முன்மாதிரி அரசியல்வாதியாகத் திகழ்ந்தார். கம்பனில் தோய்ந்த ஜீவா பாரதியின் பொதுவுடமை சிந்தனைகளையும் பரப்பினார்.

அவரது நூல்களை நாட்டுடமை ஆக்கவும் பாடுபட்டார். மக்கள் மன்றத்தில் மட்டுமல்லாது சட்டமன்றத்திலும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக குரல் கொடுத்தார். தமிழ்நாடு என்று பெயர் சூட்டவும், கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடினார். தமிழ் ஆட்சி மொழியாகவும், பயிற்சி மொழியாகவும் நீதி மொழியாகவும் வேண்டுமென சட்டமன்றத்தில் தமிழில் முழங்கினார். அரசியலில் எளிமைக்கும், வலிமைக்கும் சொந்தக்காரராய்த் திகழ்ந்தார்.

காலுக்குச் செருப்புமில்லை என்ற பாடலும் சொல்லும் நா சமதர்மமே என்கிற பாடலும் அவரது உழைப்பாளி வர்க்கச் சிந்தனையை என்றென்றும் நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கும். விடுதலைப்போரில் ஈடுபட்டு சிறைப்பட்டார். விடுதலைக்குப் பின் தமிழுக்காகப் போராடி தடியடியும் பட்டார். தமிழ் கூறும் நல்லுலகில் அவர் பெயர் என்றும் நிலைத்திருக்கும்.