india

img

ஜனநாயகத்தின் உணர்வைக் கொல்ல தேர்தல் ஆணையத்துடன் பாஜக சதி நானா படோலே குற்றச்சாட்டு

மும்பை மகாராஷ்டிராவில் ஜனநாய கத்தின் உணர்வைக் கொல்ல தேர்தல் ஆணை யத்துடன் பாஜக சதி செய்தது என அம்மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே குற்றம்சாட்டி யுள்ளார்.

இதுதொடர்பான ஐஏஎன் எஸ் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த நேர்காணலில், “மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்த லின் பொழுது தில்லியில் இருந்து பாஜகவினர் அதிகளவில் வந்தனர். பாஜகவினரை மகாராஷ்டிரா மக்கள் ஆதரிக்கவில்லை. அவர்க ளின் கூட்டங்களுக்கு மக்கள் செல்ல வில்லை. குறிப்பாக மகாயுதி மீது விவசாயிகள் கோபமடைந்தனர்; பணவீக்கத்தால் சாமானியர் கோப மடைந்தனர் ; இளைஞர்கள் வேலை யின்மையால் கோபமடைந்தனர். அப்படி இருக்கையில் மீண்டும் எப்படி மகாயுதி அரசு ஆட்சிக்கு வந்தது? 

மக்கள் தான் பெரியவர்கள்

ஜனநாயகத்தில் மக்களின் வாக்குரிமையை கூட பாஜக ஒழித்து விட்டது. தேர்தல் ஆணை யமும், பாஜகவும் இணைந்து இந்த நாட்டின் ஜனநாயகத்தை பட்டப்பக லில் கொல்லும் வேலையைச் செய்கின்றன. இந்த உணர்வு மக்கள் மனதில் உள்ளது. மக்க ளின் உணர்வுகளையும் அரசியல் சாசனத்தையும் பாதுகாக்க பாடுபடு வோம். ஜனநாயக நாட்டில் எந்த தலைவரும் பெரியவர் இல்லை. ஜனநாயக நாட்டில் பொதுமக்கள் தான் பெரியவர்கள். பொது மக்கள் மனதில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இன்று சாமானியர் தனது வாக்குக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறார்கள். தேர்தல் ஆணையம் வாக்குச் சீட்டு மூலம் தேர்தலை நடத்த வேண்டும். நமது அரசியலமைப்புச் சட்டத்தில் அத்தகைய அமைப்பு வழங்கப் பட்டுள்ளது” என அவர் கூறினார்.