பில்கிஸ் பானு வழக்கில் வரவேற்கத்தக்க தீர்ப்பினை அளித்ததன் மூலம் உச்சநீதி மன்றம், பில்கிஸ் பானுவுக்கு நீதி வழங்கியிருக்கிறது.
“அரசாங்கங்கள் என்பவை அரசியலமைப்புச் சட்ட நிறுவனங்கள் ஆகும். அவை சட்டத்தின் மாண்புக ளுக்கு மாறாகவும், சட்டத்தின் வரம்பு எல்லைக்கு முரணாகவும் செயல்படுமானால், நமது நாடு ஒரு ஜனநாயகம் என்பதாக உயிர்த்து இருக்கிற அடிப்ப டையான அம்சத்திற்கு உலை வைப்பதாக அமைந்து விடும்” என்று சுட்டிக்காட்டி, குஜராத் பாஜக அரசின் நடவடிக்கைகளை விமர்சித்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பினை வரவேற்றும் எமது கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. 20 ஆண்டுகள் நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்கு பின்னர் பில்கிஸ் பானுவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கும்பல் பாலியல் கொடூ ரங்களையும், குடும்பம் குடும்பமாக படுகொலைக ளையும் அரங்கேற்றிய கொடிய குற்றவாளிகள் எந்தவிதத்திலும் தப்பிவிடக்கூடாது.