india

img

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் 798 மருத்துவர்கள் பலி

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் 798 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். 
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மார்ச் மாதம் துவங்கி தற்போது படிப்படியாக குறையத்துவங்கி உள்ளது. இரண்டாவது அலையில் அதிக அளவில் மருத்துவர்களும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகினர். இந்நிலையில் நாடு முழுவதும் இரண்டாவது அலையில் 798 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. 
இதில் தில்லியில் 128 மருத்துவர்களும், பீகாரில் 115 மருத்துவர்களும், உத்தரபிரதேசத்தில் 79 பேரும், மேற்கு வங்கத்தில் 62 பேரும், தமிழகத்தில் 51 மருத்துவர்களும், ஆந்திராவில் 40 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர். 
 

;