india

img

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29 முதல் தொடக்கம்

புதுதில்லி, ஜன.05-
நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
கொரோனா பரவலை காரணம் காட்டி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இது தொடர்பான விவாதத்தை தவிர்ப்பதற்காகவே மத்திய அரசு குளிர்காலக் கூட்டத் தொடரை ரத்து செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், மார்ச் 8ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அத்துடன், 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;