“சம்பாதிக்கும் பெண்ணைவிட குடும்பத் தலை வியாக வீட்டில் கடமையாற்றும் இல்லத்தரசி யின் பணி எந்த வகையிலும் குறைந்தததல்ல” என வழக்கு ஒன்றின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காளி வன்முறை தொடர்பாக கைது செய்யப் பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷிபு ஹஸ்ராவை 8 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க பசிர்ஹட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளத்தாக்கு பகுதியில் மழையும், பள்ளத் தாக்கின் மேல் பகுதியில் கடுமையான பனிப் பொழிவும் என காஷ்மீர் பகுதி இரண்டு வெவ் வேறான வானிலையுடன் காட்சி அளித்து வருகிறது.
அசாம் மாநிலம் அலிபூர்துவாராவின் மதா ரிஹட் பகுதியில் உள்ள ராஜேஷ் பானிக் என்பவரது இனிப்புக் கடையில் புகுந்த காட்டு யானை திருமண விருந்துக்காக தயாரிக்கப்பட்ட இனிப்புகளை மொத்தமாக காலி செய்த நிகழ்வு நடந்துள்ளது. யானை ருசித்து காலி செய்த இனிப் பின் மதிப்பு ரூ.50,000 என தகவல் வெளியாகி யுள்ளது.
ஜார்க்கண்டில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது, மாநிலத்தில் கூட்டணி ஆட்சிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று முதல்வர் சம்பாய் சோரன் கூறியுள்ளார்.
இந்திய திரையுலகில் பிரம்மாண்ட ஹிட் அடித்த “தங்கல்” படத்தில் அமீர் கானின் இரண்டாவது மகளாக (குழந்தை நட்சத்திரமாக - பபிதா) நடித்த சுஹானி பட்நாகர் (19), இரண்டு நாட்களுக்கு முன் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மிக இளம் வயதில் அவர் உயிரிழந்ததால், பல்வேறு சர்ச்சையான செய்திகள் வெளி வந்தது. இந்நிலை யில், தற்போது சுஹானி பட்நாகர் டெர்மடோம யோசிடிஸின் எனப்படும் தசைகளில் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தக வல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத் தைச் சேர்ந்த சிவம் ராகவ் (21) நீட் தேர்விற் காக ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக படித்து வந்தார். இந்நிலை யில், ஞாயிறன்று கோட்டாவின் லேண்ட்மார்க் நகரில் உள்ள விடுதி அறையில் உடல்நலக்குறை வால் சிவம் ராகவ் உயிரிழந்தார். பிரதேச பரிசோத னையில் பதற்றம் காரணமாக அதிக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையால் சிவம் ராகவ் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
அலகாபாத்
“இந்தியா” கூட்டணியில் இணைய பகுஜன் சமாஜ் கட்சிக்கு அழைப்பு
பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற 26 எதிர்க்கட்சிகள் ஒன் றிணைந்துள்ள “இந்தியா” கூட்டணியில் சேர பகுஜன் சமாஜ் கட்சிக்கு காங்கிரஸ் மீண்டும் அழைப்பு விடுத்துள் ளது.
இதுகுறித்து உத்தரப்பிரதேச காங்கி ரஸ் பொறுப்பாளரான அவினாஷ் பாண்டே கூறுகையில்,”மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி “இந்தியா” கூட்ட ணியில் இணைய, கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் விரும்புகின்றன. அதனால் “இந்தியா” கூட்டணியில் பகு ஜன் சமாஜ் கட்சிக்கான கதவுகள் திறந்தே உள்ள நிலையில், பாஜக எதிர்ப்பாளராக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் மாயாவதி, பாஜகவுக்கு எதிரான ஒருங்கி ணைந்த போராட்டத்தில் சேர விரும்பு கிறாரா இல்லையா என்பதை விரைவில் அறிவிக்க வேண்டும்” என அவர் கூறி யுள்ளார்.
மும்பை
‘பாஜகவின் மிரட்டலுக்கு அஞ்சும் கோழைகள் வெளியேறலாம்’
பாஜகவின் மிரட்டலுக்கும், பதவி ஆசையில் இருக்கும் நபர்கள் யார் வேண்டுமானாலும் பாஜகவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளில் இருந்து வெளியேறலாம் என சிவ சேனா (உத்தவ்) மூத்த தலைவரும், எம்பி யுமான சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,”காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அவர் காங்கிரஸை விட்டு விலகுவார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் பாஜகவின் மிரட்டலுக்கும், அமலாக்கத் துறை நடவடிக்கைக்கும் அஞ்சி நடுங்கும் நபர்கள், தன் மகன் தேர்தலில் வெற்றி பெற வேண்டும், பதவி கிடைக்க வேண் டும் என்று நினைக்கும் நபர்கள் எதிர்க்கட்சி யிலிருந்து கண்டிப்பாக வெளியேற லாம். முன்பு விசுவாசமற்ற, கோழைத்தன மான சிவசேனாவின் ஷிண்டே, என்சிபி யின் அஜித் பவார் ஆகியோர் அமலாக் கத்துறைக்கு பயந்து வெளியேறி பாஜக வுடன் உறவாடி வருகிறார்கள். இதே லிஸ்ட்டில் தற்போது கமல்நாத் பெய ரும் அடிபடுகிறது. கமல்நாத் மத்தியப்பிர தேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி யின் வெற்றியை நாசம் செய்தவர். அவர் செல்வதாக இருந்தால் செல்லட்டும்” என அவர் கூறினார்.