18வது மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு நாட்டு மக்கள் கடுமை யான பதிலடி கொடுத்து பாடம் புகட்டியுள்ள போதிலும், கூட்டணிக் கட்சிகளின் தயவுடன் ஆட்சிக்கட்டிலில் மீண்டும் அமர்ந்திருக்கும் மோடி அரசு, மீண்டும் இந்துத்துவா மதவெறி நிகழ்ச்சி நிரலை அமல்படுத்தும் திட்டத்துடன் நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை கூர்மைப்படுத்தியுள்ளது.
இதை அம்பலப்படுத்தவும் தடுத்து நிறுத்த வும் வலுவான போராட்டங்களை நாடாளுமன்ற த்திற்கு உள்ளேயும் வெளியேயும் உறுதியாக மேற்கொள்வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் புதுதில்லியில் ஜூன் 28-30 தேதி களில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின் னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
பாஜகவின் பின்னடைவு
18ஆவது மக்களவைக்கும் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் குறித்து மத்தியக் குழு விவா தித்தது. இது பாஜகவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவு என்று முடிவுக்கு வந்தது. இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலம் இந்திய மக்கள், அரசமைப்புச்சட்டத்தையும், நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம்சத்தைப் பாதுகாத்திட வேண்டும் என்ற உறுதியையும், தங்களுடைய வாழ்வாதாரங்கள் மிகவும் கூர்மையான முறையில் வீழ்ச்சி அடைந்து கொண்டிருப்பதன் காரணமாக தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆழமான கவலைகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதன்விளை வாக பாஜக சென்ற இரு மக்களவைத் தேர்தல் களிலும் பெற்றதைப்போல பெரும்பான்மை யைப் பெற முடியாத நிலையை மக்கள் உத்தர வாதப்படுத்தி இருக்கிறார்கள். 400 இடங் களுக்கும் மேல் வெல்வோம் என்று மமதையில் இருந்த பாஜக-வின் அறிவிப்புகளை நிரா கரித்து, 2019 மக்களவைத் தேர்தலில் பெற்றதை விட 63 இடங்களைக் குறைத்து 240 இடங் களை மட்டுமே அளித்துள்ளனர். ஒட்டுமொத்தத் தில் பாஜக 92 இடங்களை இழந்துள்ளது. ஆயி னும் புதிதாக 29 இடங்களை அது பெற்றுள்ள தால் அதன் நிகர இழப்பு என்பது 63 ஆக மாறி யிருக்கிறது. இது பெரும்பான்மை பெறுவதற்கு 32 இடங்கள் குறைவாகும். எனினும், அதன் கூட்டணிக் கட்சிகள் 52 இடங்களைப் பெற்றி ருப்பதால், மோடி இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தை 292 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், அதாவது தேவைப்படும் பெரும்பான்மையைவிட 20 இடங்கள் மட்டுமே அதிகம் உள்ள நிலையில், அமைத்திருக்கிறார்.
இந்தியா கூட்டணியின் உறுதியான செயல்பாடு
‘இந்தியா கூட்டணி’ கட்சிகள் 234 இடங் களில் வெற்றி பெற்று, மக்களைத் தங்கள் பக்கம் அணிவகுத்துள்ளன. இது பெரும்பான்மைக்கு 38 குறைவாகும். ‘இந்தியா கூட்டணி‘ கட்சிகள் மொத்தத்தில் 40.6 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ள அதே சமயத்தில், தேசிய ஜனநாய கக் கூட்டணி மொத்தத்தில் 42.5 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. இரு கூட்டணி க்கும் இடையே உள்ள வித்தியாசம் வெறும் இரு விழுக்காடுக்கும் குறைவாகும். அதாவது வெறும் 1.9 விழுக்காடேயாகும்.
இவ்வாறு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பாதிப்பான விதத்தில் முடிவுகள் வந்திருந்த போதிலும், மோடியின் மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்திட பாஜக கடும் தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒட்டுமொத்த வாக்குப் பங்கு என்பது ஒரு விழுக்காடு அள விற்கு வீழ்ச்சியடைந்துள்ளதால், அது கடந்த பத்தாண்டுகளாக மக்கள் மத்தியில் பரப்பி வந்த இந்துத்துவா மதவெறி உணர்வை மேலும் ஒருமுகப்படுத்தும் வேலையில் இறங்கியிருக் கிறது.
நீடிக்கும் தாக்குதல்கள்
தேர்தல் முடிவுகள் வெளிவரத்தொடங்கியதி லிருந்தே, முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதி ராக தொடர்ந்து தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அதே சமயத்தில், இடதுசாரிகளை யும் சேர்த்து, எதிர்க்கட்சியினரைக் குறிவைத்து ஒன்றிய அரசின்கீழ் இயங்கும் புலனாய்வு முக மைகளை ஏவிவிடும் நடவடிக்கைகளும் தொடர் கின்றன. இதழாளர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைகள், மத்தியக் குற்றப் புல னாய்வுக் கழகத்தால் தில்லி முதல்வர் மீண்டும் கைது செய்யப்படுதல், அருந்ததிராய் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர அனுமதி வழங்கியிருத்தல் போன்ற கொடுங்கோன்மை நடவடிக்கைகள் எவ்விதத் தடையுமின்றி தொடர்கின்றன.
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பிரதமரின் முதன்மை செயலாளர் மீண்டும் நியமனம் செய்யப்படுதல், இந்தியாவிற்கான நிகழ்ச்சிநிரலில் இல்லை என்ற போதிலும்கூட ஜி.7 மாநாட்டின் தலைவர்களைச் சந்திப்ப தற்காக பிரதமர் இத்தாலி சென்றமை, சென்ற அமைச்சரவையில் இருந்த கிட்டத்தட்ட அனை த்து அமைச்சர்களையும் மீண்டும் சேர்த்துக் கொண்டிருத்தல், சென்ற மக்களவையில் சுமார் 150 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடை நீக்கம் செய்த அதே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவையே மீண்டும் மக்களவை சபாநாயகராகத் தேர்ந்தெடுத்திருப்பது ஆகிய இவை அனைத்துமே மோடி ஆட்சியின் கீழ் எதுவும் மாறவில்லை என்பதையே காட்டு கின்றன.
இந்தச் சூழ்நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டம், மதச்சார்பற்ற ஜனநாயகம், கூட்டாட்சி அமைப்புமுறை மற்றும் மக்களின் குடிமை உரிமைகள் பாதுகாப்பான போராட்டங்களை யும் நாட்டு மக்களின் பெரும்பாலான மக்க ளின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற் கான போராட்டங்களோடும் இணைத்து நாடாளு மன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டங்களை உக்கிரப்படுத்த வேண்டியிருக் கிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு முடிவு செய்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பணியை நாடு முழுதும் மதச்சார்பற்ற கட்சிகளோடு இணைந்தும் சுயேச்சையாகவும் மேற்கொண்டிடும்.
மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கியப் பங்கு
மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிராக உழைக்கும் மக்களின் போராட்டங்களை அணிதிரட்டியதிலும், ஆர்எஸ்எஸ்/பாஜக-விற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகளை அணிதிரட்டியதிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கியமான பங்கினை வகித்தது. அதன் மூலம் இந்தியா கூட்டணியை வலுப்படுத்து வதற்கும் பங்களிப்பினைச் செய்துள்ளது. எனி னும் கட்சிக்கு கிடைத்துள்ள இடங்கள், ஏமாற்றம் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. கட்சி, 2019இல் 71 இடங்களில் போட்டியிட்டபோதிலும் இப்போது 52 இடங்களில் போட்டியிட்டது. இதில், 4 இடங்களில் வென்றுள்ளது. (தமிழ்நாடு 2, கேரளா மற்றும் ராஜஸ்தான் தலா 1). இடது சாரிகள் மொத்தத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். [மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 4, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 2, இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) - 2]
அனைத்து மாநிலங்களிலும் கட்சியின் செயல்பாடுகளை மத்தியக்குழு விமர்சன ரீதியாக ஆய்வு செய்துள்ளது. பலவீனங்களும், குறைபாடுகளும் அடையாளம் காணப்பட்டு, சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. கட்சியின் மாநிலக் குழுக்கள் இப்போது அந்தப் பணி களை அமல்படுத்திடும் வேலைகளில் முன்னேறி செல்லவும், அதன் மூலம் கட்சியை மேலும் வலுப்படுத்திடவும் களமிறங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ச்சிகளை நடத்திடுக!
நாட்டின் பல பகுதிகளில் மக்களவைத் தேர்தல்களில் பாஜக பின்னடைவினை சந்தித்ததைத் தொடர்ந்து அது முஸ்லிம் மக்களுக்கு எதிராக அவர்களின் உயிர்கள், உடைமைகள், வாழ்வாதாரங்கள் மீது கடும் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இத்தாக்குதல்களை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கண்டிக்கிறது.
சத்தீஸ்கரில் ராய்ப்பூர், உத்தரப்பிரதேசம் அலிகார், குஜராத்தில் சிகோட்ரா முதலான இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்கு தலில் ஐந்து பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி, 11 முஸ்லிம்களின் வீடுகள் மத்தியப் பிரதேசம் மாண்டலாவின் தரைமட்டமாக்கப்பட்டி ருக்கின்றன. முஸ்லிம் ஒருவரின் கடை சூறை யாடப்பட்டிருக்கிறது. இமாச்சலப்பிரதேசத்தில் நாஹன் பகுதியில் பலருடைய கடைகள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டன. ஒடிசாவில் பாலசோரில் மோதல் நடைபெற்றுள்ளது.
குஜராத்தில் வதோதராவில் முதலமைச்சர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்காகக் கட்டப்படும் வீட்டுவசதி வளாகத்தில், ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்டையில் உள்ள இந்துக் குடும்பத்தி னர் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக் கிறார்கள்.
தில்லியில், சங்கம் விஹாரில் வழிபாட்டுத்த லம் ஒன்றின் அருகே பசுமாடு ஒன்று இறந்துகிடந்ததை அடுத்து, இந்துத்துவாவாதி களின் ஆத்திரமூட்டும் பேச்சுக்களைக் கேட்டு, அப்பகுதியில் வசித்துவந்த முஸ்லிம்கள் அந்தப்பகுதியிலிருந்து ஓடிவிட்டதாகக் கூறப்படு கிறது.
ஜபல்பூரில் இந்துத்துவா வெறியர்கள், முஸ்லிம்கள் நகரத்தைக் காலிசெய்துவிட்டு சென்றிடவேண்டும் என்று அச்சுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டதற்குப் பழிவாங்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாறு இந்துத்துவா வெறியர்கள் மதவெறித் தீயை விசிறிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
பாஜக மற்றும் அதன் மதவெறி அமைப்பு களின் இத்தகைய மதவெறி நடவடிக்கை களுக்கு எதிராக விழிப்புடன் இருந்திட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கிளைகளையும் மத்தியக்குழு அறைகூவி அழைக்கிறது. இவர்களின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
தேர்வு ஊழல்கள்: கல்வி அமைச்சர் ராஜினாமா செய்திட வேண்டும்
தேசிய தேர்வு முகமை (NTC-National Testing Agency)யால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும், ஊழல்கள் மற்றும் மோசடிகள் நடைபெற்று பல லட்சக்கணக்கான மாண வர்கள், அவர்களின் பெற்றோர்கள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டிருப்பதற்கு தன் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திக் கொள்கிறது.
கல்வியை மையப்படுத்துதல், வணிகமயப் படுத்துதல் மற்றும் வகுப்புவாத மயப்படுத்து தலை நியாயப்படுத்திடும் 2020 புதிய கல்விக் கொள்கைக்கு மத்தியக் குழு அளித்துவரும் எதிர்ப்பினை மீண்டும் வலியுறுத்துகிறது. தேர்வு முறைகளை மத்தியத்துவப்படுத்துதல் இதன் ஓர் அங்கமாகும். நடந்துள்ள ஊழல்கள் தொடர்பான வழக்குகளை மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்திடம் ஒப்படைத்திருப்பது, வியாபம் ஊழலில் செய்ததைப்போல ஒரு கண்துடைப்பு வேலையேயாகும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுதியாகக் கருதுகிறது.
மத்தியக் கல்வி அமைச்சர், அப்பதவி யில் தொடர்ந்து நீடிப்பதற்கான தார்மீக உரி மையை இழந்துவிட்டார். அவர் உடனடியாக தன் ராஜினாமா கடிதத்தை அளித்திட வேண்டும். மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை யை ரத்து செய்திட வேண்டும், தேசிய ஆய்வு குழுமத்தை கலைத்துவிட வேண்டும், கல்வி யை மையப்படுத்துவதற்காக எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என்று மத்தியக்குழு வற்புறுத்துகிறது.
- தமிழில் : ச. வீரமணி