பணக்காரர்களை மட்டுமே மனதில் வைத்து ரயில்வே துறையின் கொள்கைகளை பாஜக அரசு வகுத்து வருகிறது. தொழிலாளர்கள், விவசாயிகள் பயணிக்கும் பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, ஏசி பெட்டிகள் அதிகமாகியுள்ளன. ஏழைகள் பயணிக்கவே இயலாத “பகட்டான ரயில்களின்” படங்களை காட்டி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.