india

img

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை ஜூலை 31வரை நீட்டிப்பு

சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கான தடை ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனை தற்போது ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், சரக்கு விமானங்களுக்கும், அரசின் அனுமதி பெற்று வெளிநாடுகளில் இருந்து வரும் சிறப்பு விமானங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;