india

img

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு

புதுதில்லி, ஜன.28-
இந்தியாவில்  சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இதையடுத்து, வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் என்ற சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை பிப்ரவரி 28ஆம் தேதி வரை வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், சரக்கு விமானங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;