india

img

தில்லியில் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது!

தில்லி,நவம்பர்.18- காற்று மாசைக் குறைக்க தில்லி அரசு கடுமையான  கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தில்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் மோசமடைந்து தரக்குறியீடு 400க்கு மேல் பதிவாகியிருந்த நிலையில் நேற்று இரவு 457 ஆக பதிவானது. இதனால் ஏற்கனவே மக்கள் பல்வேறு நோய்களால் பதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தில்லி அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களுக்கு மட்டுமே தில்லிக்குள் நுழையத் அனுமதி. அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றவும், மீதமுள்ள ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 9ஆம் வகுப்பு வரை மற்றும் 11ஆம் வகுப்புக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்த தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
மறு உத்தரவு வரும்வரை இந்த கட்டுப்பாடுகள் நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது