india

img

சீத்தாராம் யெச்சூரி மகன் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

சீத்தாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி. 34 வயதான ஆஷிஷ் யெச்சூரி நியூஸ் லாண்ரி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இதற்கிடையில், ஆஷிஷ் யெச்சூரிக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் குருக்கிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் ஆஷிஷ் யெச்சூரி இன்று காலை 6 மணியளவில் உயிரிழந்தார்.  

இது தொடர்பாக சீத்தாராம் யெச்சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், எனது மூத்த மகன் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று காலை உயிரிழந்துவிட்டார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுக்கு நம்பிக்கையும் எனது மகனுக்கு சிகிச்சையும் அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். 

;