சிசோடியாவுக்கு ஜாமீன்
மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி மூத்த தலைவரும், தில்லி முன்னாள் முதல்வருமான மணீஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி 26 அன்று ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். அதே ஆண்டு மார்ச் 9 அன்று பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத்துறையும் கைது செய்தது. இந்த விவகாரத்தில் மணீஷ் சிசோடியா உச்சநீதி மன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு வெள்ளியன்று நீதிபதி கள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வ நாதன் அடங்கிய அமர்வு முன்பு விசார ணைக்கு வந்த நிலையில், அமலாக்க;j த்துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் மணீஷ் சிசோடி யாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். 17 மாத சிறைவாசத்திற்கு பிறகு மணீஷ் சிசோடியா ஜாமீன் பெற்று விடுவிக்கப்பட உள்ளார்.
கோழிக்கோடு
வயநாட்டில் நிலநடுக்கம்?
மீட்புப் பணி நிறுத்தம்
கேரள மாநிலம் வயநாடு மாவட் டத்தின் கிழக்கு பகுதி மலைக் கிராமங்களான சூரல்மலை, முண்டக்கை, புஞ்சேரிமட்டம், அட்ட மலை, மேப்பாடி, குன்கோம் ஆகிய பகுதி களில் கடந்த ஜூலை 30 அன்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரி வில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 416 ஆக அதிகரித்துள்ள நிலையில், காணாமல் போன 150க்கும் மேற் பட்டோரை தேடும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அருகே உள்ள கிராமங்கள் மற்றும் வயநாடு மாவட் டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளி யன்று காலை 10.15 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. அம்பலவயல் கிராமம் மற்றும் வைத்திரி தாலுகாவில் நிலநடுக்கத்திற்கு நிகராக சப்தம் எழுந்த தாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடியில் இருந்து திடீரென மர்ம சத்தம் மற்றும் அதிர்வலைகளைக் கேட்ட தாக கூறி, மலை அடிவாரத்தில் வசித்த மக்கள் அவசரமாக அவசரமாக சரிவுப் பகுதிக்கு ஓடினர்.
மீட்புப்பணி நிறுத்தம்
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி பகுதி களிலும் நிலநடுக்கம் போன்ற சத்தம் உணரப்பட்டதாக தகவல் வெளியா னதை அடுத்து பேரிடர் மீட்புப் பணி நிறுத்தப்பட்டது. மீட்புப் பணி நடை பெறும் பகுதியைச் சுற்றி இருந்த மக்கள் வெளியேறுமாறு ராணுவம் உத்தர விட்டது. வெள்ளியன்று மாலை பேரிடர் மீட்புப் பணி நடைபெறும் பகுதிகளில் வாழும் மக்கள் இடம்பெயந்து விட்டனர் என்றும், மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் டி.ஆர்.மேகஸ்ரீ தெரிவித்தார்.
தேசிய நில அதிர்வு மையம் மறுப்பு
“கேரளாவில் உள்ள வயநாட்டில் உள்ள பல பஞ்சாயத்துகளில் வசிப்பவர் கள் வெள்ளியன்று அதிகாலையில் நில அதிர்வைப் போன்று பலத்த சத்தம் கேட்டதாகவும், நிலநடுக்கம் ஏற்பட்டதாக வும் தெரிவித்ததாக தகவல் கிடைத் தது. உண்மையில் வயநாட்டில் நில அதிர்வு எதுவும் இல்லை” என்று தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தகவல் தெரிவித்துள்ளது.