india

img

பாலியல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம் பரோலில் விடுதலை

சட்டப் பேரவை தேர்தலையொட்டி, குர்மீத் ராம் ரஹீமுக்கு 20 நாள் பரோல் வழங்கி கடந்த திங்கள்கிழமை அரசு அனுமதி அளித்தது. 

ஹரியானா மாநிலம் சிர்சா வை சேர்ந்த தேரா சச்சா சவுதா  ஆசிரமத்தின் தலைவர் குர்மீத்  ராம் ரஹீம் சிங் ஆசிரம பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அவருக்கு 20  ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பத்திரிகையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குர்மீத்துக்கும் அவரது கூட்டாளிகள் 3 பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

குர்மீத் ராம் தன்னை 20 நாள் பரோலில் விடு விக்குமாறு ஹரியானா அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்த நிலையில் மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாநில தலை மை தேர்தல் அதிகாரியின் பரிசீலனைக்கு சிறைத் துறை அனுப்பி வைத்தது. இந்த நிலையில் குர்மீத் ராம் ரஹீமுக்கு 20 நாள் பரோல் வழங்கி கடந்த திங்கள்கிழமை அரசு அனுமதி அளித்தது. பரோ லில் செல்லும் போது தேர்தல் தொடர்பான பணிக ளில் ஈடுபடவோ, பொது இடங்களில் பேசவோ கூடாது என்பன உள்பட பல நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளன. பரோலில் செல்லும் போது, உபி மாநிலம் பாக்பத்தில் உள்ள தேராசச்சா ஆசிரமத்தில் தங்கி இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து குர்மீத் ராம் ரஹீம் புதனன்று சிறை யில் இருந்து விடுவிக்கப்பட்டார்.