india

img

டெல்லியில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு - மணீஷ் சிசோடியா 

டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். 

டெல்லியில் தற்போது 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நவம்பர் 1ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படும் என்று அம்மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், விருப்பம் உள்ளவர்கள் நேரடியாகப் பள்ளிகளுக்கு வரலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பக் கட்டாயப்படுத்த மாட்டார்கள்.  நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் ஒரே நேரத்தில் நடத்தப்படும். அதிகபட்சமாக 50 சதவீதத்திற்கு மேலான மாணவர்கள் ஒரே நேரத்தில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள அழைக்கப்பட மாட்டார்கள். பள்ளிகள் தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். 

;