india

img

செபி தலைவராக ஊதியம் பெற்று ஐசிஐசிஐ வங்கியிலும் தனிச் சம்பளம்

புதுதில்லி செபி தலைவராக ஊதியம் பெறும் மாதவி, ஐசிஐசிஐ யிலும் சம்பளம் வாங்கி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

“செபி” என அழைக்கப்படும் பங்கு பரிவர்த்தனை வாரியம் (sebi - Securities and Exchange Board  of India) பங்குச்சந்தையை ஒழுங்குப் படுத்தும் பணியை செயல்படுத்தி வருகிறது. அதாவது முதலீடு செய் யக்கூடிய பங்குச்சந்தையை ஒழுங்கு படுத்தும் முக்கிய பணியை செபி மேற்கொண்டு வருகிறது. தற்போது செபியின் தலைவராக மாதவி பூரி புச் உள்ளார்.

பங்குச்சந்தை முறைகேட்டில் ஈடுபட்ட பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் அதானிக்கு ஆதர வாகவும், தன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க மாதவி பூரி புச்சிற்கு வெளிநாட்டு பங்குகளை அதானி வாரி வழங்கியதாகவும் ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது இரண்டாவது ஆய்வறிக்கையில் போட்டுடைத்து, மாதவி மீது கடு மையான அளவில் குற்றச்சாட்டை முன்வைத்தது. அதாவது அதானிக்கு மாதவி மிகவும் நெருக்கமானவர் என ஹிண்டன்பர்க் கூறியது. இந்த சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில், மாதவி பூரி புச் செபி தலைவராக ஊதியம் பெற்று ஐசிஐசிஐ வங்கி யிலும் தனிச் சம்பளம் பெறுவதாக மேலும் ஒரு புகார் கிளம்பியுள்ளது. 

ரூ.16.8 கோடி சம்பளம்

இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொ டர்பாளர் பவன் கெரா கூறுகையில், “செபி தலைவர் மாதவி பூரி புச் 2017 முதல் தற்போது வரை ரூ.16.8 கோடியை ஐசிஐசிஐ வங்கியில் ஊதியமாக பெற்றுள்ளார். அதாவது செபியின் முழுநேர உறுப்பினராக இருந்த காலத்தில் இருந்தே ஐசிஐசிஐ வங்கியில் இருந்து மாதவி ஊதியம் பெற்றுள்ளார். மேலும் ஊழியர்களுக்கு சலுகை விலையில் வழங்கப்படும் பங்குகளையும் ஐசிஐசிஐ வங்கியில் இருந்து பெற்று பயனடைந்துள்ளார். இது செபியின் 54-ஆவது பிரிவை மீறுவதாகும். செபியின் முழு நேர உறுப்பினராக இருந்து கொண்டே ஐசிஐசிஐ வங்கியில் இருந்து ஊதியம் பெற்றது ஏன்? மாதவி மீதான இந்த குற்றச்சாட்டால் செபியின் நேர்மை குறித்து கேள்வி எழுகிறது. இதனால் செபி அமைப்பில் வெளிப்படைத் தன்மை தேவை. முக்கியமாக செபி யின் தலைவரை நியமிக்கும் பிரதமர் மற்றும் ஒன்றிய உள்துறையின் நியம னக் குழு தான் இதற்கு பொறுப்பு” என அவர் கூறினார். சம்பளம் தொ டர்பான அறிக்கையுடன் இந்த குற்றச் சாட்டை பவன் கெரா முன்வைத்துள் ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதவி ஐஏஎஸ் அதிகாரி கிடையாது
குஜராத்தில் படித்தவர் ; பாஜகவிற்கு மிக நெருக்கமானவர்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ஆட்சி யில் இருந்த பொழுது செபி அமைப்பின் தலை வர் பொறுப்பில் ஐஏஎஸ் மற்றும் அரசு மூத்த  அதிகாரிகளை நியமித்து வந்தது. அது மோடி ஆட்சியிலும் தொடர்ந்தது. 1988 முதல் 2022 வரை 33 ஆண்டுகளாக செபி தலைவராக இருந்தவர்கள் ஐஏஎஸ் அதிகாரி, அரசு துறைகளில் சீரிய அனுபவம் கொண்டவர்களாக இருந்தனர். ஆனால் திடீரென 2022இல் தனியார் துறை நிதி நிர்வாகத்தில் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் எனக் கூறி, மாதவி பூரி புச்சை செபியின் தலைவராக நியமித்தது மோடி அரசு. இதன்மூலம் ஐஏஎஸ் மற்றும் அரசுப் பணி அனுபவம் இல்லாத முதல் செபியின் தலைவராக மாதவி பொறுப்பேற்றார்.

அகமதாபாத்தில் படித்தவர்

மாதவி குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம்-மில் எம்பிஏ படித்து, 1989-ம் ஐசிஐசிஐ வங்கி யில் இணைந்தார். 2011-ம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள  கிரேட்டர் பசிபிக் கேபிடல் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றார். பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் பணியாற்றிய மாதவி, மோடி பிரதமர் ஆன  பின்பு 2017இல் செபியின் இயக்குநர் குழுவில் சேர்க்கப்பட்டார். செபியின் இயக்குநர் குழுவில் இருந்த போது இவர் கையாண்ட வழக்குகளில் கடுமையான நடவடிக்கைகளையும் உத்தரவுகளையும் பிறப்பித்தி ருக்கிறார் எனக் கூறி, 2022இல் ஆலோசனைக் கூட்டம் கூட நடத்தாமல் மாதவி செபியின் தலைவராக நிய மிக்கப்பட்டார். தனது நண்பர்களான அதானி, அம்பானி க்கு உதவுவதற்காகவே தங்களுக்கு நெருக்கமான மாதவி பூரி புச்சை  மோடி அரசு செபி அமைப்புக்குள் கொண்டு வந்ததா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.