தில்லியிலிருந்து உத்தர்கண்ட் சென்றபோது இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் படுகாயமடைந்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், தில்லியிலிருந்து அவரது சொந்த ஊரான உத்தர்கண்டுக்கு இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. மேலும், கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பந்த், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.