india

img

அனைத்தையும் அறிந்துள்ள அறிவாளன்

அனைத்தையும் அறிந்துள்ள அறிவாளன் என்பதற்காகவே எவரை வேண்டுமானாலும் ஓர் இந்து தன் குருவாக ஏற்றுக் கொள்வதை சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை. இதை இந்து ராஜ்ஜியத்தை நிறுவுவதற்கு சிவாஜிக்கு தூண்டுகோலாக இருந்த மகாராஷ்டிர பிராமணரான துறவி ராமதாசர் நன்கு தெளிவுபடுத்தியிருக்கிறார். மராட்டிய மொழியில் சமூக, அரசியல், சமயம் பற்றி தான் எழுதியுள்ள தச போதம்  எனும் நூலில் ராமதாசர் அந்நியஜன் (தீண்டப்படாதான்) பண்டிதனாக இருந்தால் அவனை குருவாக ஏற்றுக் கொள்ளலாமோ என வினா எழுப்பி அவ்வாறு ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றே விடையளித்துள்ளார்.

- டாக்டர் அம்பேத்கர் -