மக்களவை தேர்தல் முடிவு வெளியாகி மோடி மீண்டும் ஆட்சியில் அமர்ந்தவுடன் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, ஏர்டெல், வோடாபோன்- ஐடியா ஆகிய 3 முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணங் களை கடுமையாக உயர்த்தியுள் ளது. அதாவது ரிலையன்ஸ் ஜியோ தனது கட்டணத்தை 12% லிருந்து 25% ஆகவும், ஏர்டெல் நிறுவனம் கட்டணத்தை 11% லிருந்து 21% ஆக வும், வோடாபோன்-ஐடியா நிறு வனம் 11% லிருந்து 21% ஆக வும் உயர்த்தியுள்ளது. இந்த கட்ட ணங்கள் சாமானிய மக்களை மிக மோசமாக பாதிக்கும் என நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்த நிலையில், ஜியோ, ஏர்டெல், வோட போன் போல நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் கட்ட ணங்களை உயர்த்தாமல் பல்வேறு சலுகைகளை அறிவித்து பலத்த பாராட்டுகளை பெற்றுள்ளது.
பிஎஸ்என்எல்லும்... சலுகையும்...
பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அம்பானியின் ஜியோ வில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் ரூ.299 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 100 இலவச எஸ்எம்எஸ், அன்லிமிடெட் அழைப்பு களுடன் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வீதம் 42 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதே போல சுனில் பார்தி மிட்டலின் ஏர் டெல் நிறுவனம் 28 நாட்கள் வேலி டிட்டி கொண்ட திட்டத்துக்கும் ரூ. 299ஆக விலை நிர்ணயம் இருக்கி றது. இந்த திட்டத்தில் 1 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு மொத்தமாக 28 ஜிபி டேட்டாவும், அன்லிமிடெட் அழைப்புகள், நாளொன்றுக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் வழங்கு கிறது. இங்கிலாந்து நிறுவனமான வோடபோன்-ஐடியா நிறுவனமும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை ரூ.299 விலைக்கு வழங் கும் நிலையில், இந்த திட்டத்திலும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, 100 இலவச எஸ்எம்எஸ் வழங்கு கிறது.
ஆனால் பிஎஸ்என்எல் நிறு வனம் வெறும் ரூ.199 விலைக்கு 40 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை வழங்குகிறது. தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும் நிலை யில், ஒரு மாதத்திற்கு 80 ஜிபி டேட்டாவை பயன்படுத்தும் வகை யில் பிரம்மாண்ட சலுகை கொடுக் கப்பட்டுள்ளது. இதுபோக அன் லிமிடெட் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் இலவச சலுகைகளும் கிடைப்பதால், ஜியோ, ஏர்டெல், வோடபோன்- ஐடியா வாடிக்கை யாளர்கள் பிஎஸ்என்எல் நிறு வனத்திற்கு படையெடுத்து வரு கின்றனர்.
80 லட்சம்...
அதிரடி அறிவிப்பால் ஜியோ, ஏர்டெல், வோடபோன்- ஐடியா நிறு வன சேவையில் இருந்து பிஎஸ் என்எல் நிறுவனத்திற்கு தாவும் வாடிக்கையாளர்களின் எண் ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 5 நாட்களில் ஜியோ, ஏர்டெல், வோடபோன்- ஐடியா சிம்களை வைத்திருக்கும் 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவைக்கு நேரடி யாக மாறியுள்ளனர். தினமும் ஆயி ரக்கணக்கான வாடிக்கையா ளர்கள் பிஎஸ்என்எல் சேவைக்கு இன்னமும் மாறிவருவது தொடர்ந்து வருவதால் ஜியோ, ஏர்டெல், வோட போன்- ஐடியா நிறுவனங்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.
“கோடி மீடியா” மூலம் ஆதாயம் தேடும் பாஜக
பிஎஸ்என்எல் கட்டணச் சலுகைக்கும் மோடிக்கும் சம்பந்தம் இல்லை
தனியார் நிறுவனங்களின் நன்கொடைக்காகவும், பிஎஸ்என்எல் நிறுவனத்தை வளரவிடாமல் ஒழிக்கவும் மோடி அரசு கடந்த 10 வரு டங்களாக பிஎஸ்என்எல் நிறு வனத்திற்கு எதிராக செய லாற்றி வருவது நாடறிந்த விஷயம். இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோட போன்-ஐடியா ஆகிய தொலை தொடர்பு நிறுவனங்கள் 5ஜி வேகத்திற்கு மாறியுள்ள நிலையில், பொதுத்துறை நிறு வனமான பிஎஸ்என்எல் நிறு வனம் இன்னும் முழுமையாக 4ஜி வேகத்தை பெற முடியா மல் தவித்து வருகிறது. இந்த நிலைமைக்கு மோடி அரசு தான் காரணம். ஆனால், தற் போது பிஎஸ்என்எல் நிறுவ னம் தன்னிச்சையாக அறி வித்துள்ள கட்டண சலுகை யை அரசியல் ஆதாயப் பொரு ளாக எடுத்துள்ளது பாஜக. தனது ஆதரவு “கோடி மீடியா” ஊடகங்கள் மூலம் மோடி படத்தை போட்டு பிஎஸ் என்எல் நிறுவனத்தின் சலுகை என மார்தட்டி வருகின்றனர் பாஜகவினர். ஆனால் எல் லாம் அறிந்த நெட்டிசன்கள் மோடிக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கட்டணச் சலு கைக்கும் எந்த சம்பந்தம் இல்லை என மீம்ஸ் வெளி யிட்டு பாஜகவின் அரசியல் ஆதாய முயற்சியை தரை மட்டமாக்கி வருகின்றனர்.
பிஎஸ்என்எல் சேவைக்கு மாறுவது எப்படி?
மற்ற டெலிகாம் சேவைகளை வைத்து இருக்கும் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவைக்கு மாற விரும்பி னால், முதலில் யுனிக் போர்ட்டிங் கோட் (Unique Porting Code) கோரிக்கை கொடுக்க வேண்டும். இதை செய்ய உங்களது மொபைலில் இருந்து 1900 என்ற எண் ணுக்கு போர்ட் (Port) என டைப் செய்து பிறகு [ஸ்பேஸ்] விட்டு உங்களின் 10 இலக்க மொபைல் நம்பரை டைப் செய்து அனுப்ப வேண்டும். இதை செய்த பிறகு 15 நாட்களுக்கு யுபிசி போர்ட் அவுட் செல்லுபடியாகும். இந்த நாட்களுக்குள் அருகில் இருக்கும் பிஎஸ்என்எல் வாடிக் கையாளர் சேவை மையத்துக்கு சென்று கஸ்டமர் அப்ளிகேஷன் பார்ம் எழுதி கொடுத்து சிம் கார்டை மாற்றிக் கொள்ள லாம். இதற்காக எந்தவித கட்டணத்தை யும் பிஎஸ்என்எல் நிறுவனம் விதிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.