india

img

சுங்கச்சாவடி கட்டண வசூல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுக: சிபிஎம்

 புதுதில்லி,மார்ச் 22- சுங்கச்சாவடிகளில் வசூல் செய்யப்படும் கட்டணம் குறித்து  ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. வலியுறுத்தினார்.  நாடாளுமன்ற மக்களவையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள எம்.பி., ஏ.எம்.ஆரிப்  பேசுகையில், ‘‘சுங்கச்சாவடி என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக மக்களை  கொள்ளையடித்து வருகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தனியார் நிறுவனங்களு டன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, கட்டுமான செலவை மீட்டெடுத்த பிறகு, சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவீதமாகக் குறைக்கப்படும். ஆனால் ஒவ்வொரு முறையும் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. நாட்டின் பல்வேறு திட்டங்களின் ஒரு பகுதி யாக இதுவரை வசூலிக்கப்பட்ட  சுங்கச்சாவடிகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுமாறு நான்  அரசுக்கு சவால் விடுகிறேன்’’ என்றுகூறினார்.