india

img

தூத்துக்குடி அழகர் ஜூவல்லர்ஸின் முத்துக்களை பில்கேட்ஸ்க்கு பரிசாக வழங்கிய பிரதமர்

புதுதில்லியில் செயற் கை நுண்ணறிவு மேம்பாடு  தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்  பில்கேட்சு டன் பிரதமர் மோடி உரையா டினார். உரையாடலின் இறு தியில் இருவரும் பல்வேறு பரிசுகளை பரிமாறிக் கொண்டனர். பிரதமர் மோடிக்கு பில் கேட்ஸ் ஊட்டச்சத்து தொடர்பான புத்தகங்களை பரிசாக வழங்கினார்.  பிரதமர் மோடி, பில் கேட்ஸ்க்கு தூத்துக்குடி முத்துக்களை பரிசாக வழங்கினார்.

இந்த முத்துக்கள் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி பிரதமரின் தூத்துக்குடி வருகையின் போது, தூத்துக்குடியில் புகழ் பெற்ற நகைக்கடையான 93 வருட பாரம்பரியமிக்க அழகர் ஜுவல்லர்ஸில்  வாங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அழகர் ஜுவல்லர்ஸ் இயக்குநர்  ஏ.ஜி.பாலாஜியிடம் கேட்ட போது அவர் கூறுகையில்,  கடந்த பிப்ரவரி 28 அன்று  பிரதமர் தூத்துக்குடிக்கு வருகை தந்த போது, பிரத மருக்கு கொடுப்பதற்கு உட னடியாக தூத்துக்குடி முத்துக்கள் வேண்டும் என்று என்னை தொடர்பு கொண்டு வாங்கிச்சென்ற னர் என்று தெரிவித்தார். அந்த முத்துக்கள் தற்போது பில்கேட்சுக்கு பரிசாக வழங்கப்பட்டது குறித்து பாலாஜி, மகிழ்ச்சி தெரி வித்தார்.