india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

“உன்னதமான நாளில் நாட்டின் சுதந்திரத்துக் காக பாடுபட்ட அத்தனை தியாகிகளுக்கும் வணக்கம். நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த சுதந்திர தின வாழ்த்துகள். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியினரது பங்க ளிப்பு அளப்பரியது” என சுதந்திர தினத்தை யொட்டி நாட்டு மக்களிடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதனன்று மாலை நேரில் சந்தித்து பேசினார்.

“மதுபான கொள்கை வழக்கில் நான் 17  மாதங்கள் சிறையில் இருப்பேன் என நினைக்கவில்லை. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் என்னை கைது செய்தனர். இதன் மூலம் என்னை நீண்ட காலம் சிறையில் அடைத்து வைப்பது தான் அவர்கள் திட்டம். தீவிரவாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மாஃபியாக்க ளுக்கு நிதியுதவி செய்வதை தடுக்கும் இந்த சட்டத் தின் கீழ் என்னை கைது செய்ய வேண்டிய அவ சியம் என்ன? என்று தெரியவில்லை” என ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா கூறினார்.

“பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீரர் - வீராங்கனைகள் அதிகளவில் பதக்கம் வெல்ல முடியாமல் போனதற்கு, போராட் டம் தான் காரணம்” என இந்திய மல்யுத்த கூட்ட மைப்பின் தலைவர் சஞ்சய் சிங் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பூமியைக் கண்காணிக்கும் செயல் பாடுகளுக்காக 175.5 கிலோ எடை மற்றும் 420 வாட்ஸ் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட அதிநவீன இ.ஒ.எஸ்-08 எனும் செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளது.

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை விசாரித்த  உச்சநீதிமன்றம், இவ்வழக்கின் விரிவான முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

பாஜக ஆளும் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள மருத்துவக் கல்லூரியில் டாக்டர் ஒருவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இளம் விவசாயியான ஹர்ஷித் கோதா அவ காடோ பழங்களை விளைய வைத்து வருடத்திற்கு 1 கோடி ரூபாய் வரை சம்பாதிக்க தொடங்கியுள்ளார். 

அதானி முறைகேட்டை விசாரித்த குழுவில் மாதவி இருந்தாரா?

புதுதில்லி அதானி முறைகேடு தொடர்பாக ஹிண்டன்பர்க்கின் 2ஆவது அறிக்கை வெளியான பின்பு மிக முக்கியமான ஒரு கேள்விக்கு செபி தலைவர் மாதவி பூரி புச் பதில் அளிக்கா மல் நழுவி வருகிறார். “அதானி முறை கேடு வழக்கை விசாரிக்கும் 6 பேர் கொண்ட செபி குழுவில் மாதவி அங்கம் வகித்தாரா? இல்லையா?” என்பது தான் அக்கேள்வி. ஆனால் இந்தக் கேள்விக் கான பதிலை செபி ஆணையமோ அல்லது மாதவி தரப்போ இன்னும் தெளிவாகக் கூறவில்லை. 

உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு

ஹிண்டன்பர்க் அறிக்கை மூலம் வெளியான அதானி முறைகேடு குற்றச் சாட்டுகள் தொடர்பாக நிலுவையில் உள்ள 2 வழக்குகளின் விசாரணையை விரைவாக முடிக்க செபிக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.