india

img

ஜனநாயகத்தின் மீது ஏவப்பட்டும் இரக்கமற்ற தாக்குதல்! - சு.வெங்கடேசன் எம்.பி

ஒரே தேசம் ஒரே தேர்தல் மசோதா, ஜனநாயகத்தின் மீது ஏவப்பட்டும் இரக்கமற்ற தாக்குதல் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
கூட்டாட்சித் தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் நோக்கில்  'ஒரே தேசம் ஒரே தேர்தல்' மசோதாவை ஒன்றிய அரசு இன்று மக்களவையில் அறிமுகம் செய்தது. இதற்கு சிபிஎம் உட்பட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் ஒரே தேசம் ஒரே தேர்தல் மசோதா ஜனநாயகத்தின் மீது ஏவப்பட்டும் இரக்கமற்ற தாக்குதல் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"ஒரே தேசம் ஒரே தேர்தல், ஜனநாயகம், கூட்டாட்சி, மக்கள் கருத்து மூன்றின் அடிப்படையையும் அறுத்தெரியும் சட்ட வரைவு. "ஒரே தேர்தல்" என்பது தேர்தலையே ஒழிக்கும் பாசிச மனோபாவம் என்பதை அம்பலப்படுத்துவோம்! ஜனநாயகத்தின் மீது ஏவப்பட்டும் இரக்கமற்ற தாக்குதலில் இருந்து இந்தியாவை காப்போம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.