india

img

ஒமிக்ரான் எதிரொலி : டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் 

நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதால் டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. 

இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிடப்பட்ட அறிவிப்பில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 

டெல்லியில் தொடர்ந்து 2 ஆவது நாளாக 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இதே போன்று கர்நாடகாவில் நாளை முதல் ஜனவரி 7 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

ஏற்கனவே, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், மாஹாராஷ்டிரா, ஹரியானா, குஜராத், அசாம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

;