முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் உலக மாணவர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கல்வி மற்றும் மாணவர்களுக்காக அப்துல் கலாம் செய்த சேவைகள் மற்றும் முயற்சிகளை அங்கீகரிக்கும் நோக்கத்தில் 1931 அன்று பிறந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவாக, உலக மாணவர்கள் தினமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை கொண்டாடும் வகையில் உலக அமைப்பு ஒரு கருப்பொருளை முடிவு செய்கிறது. இந்த ஆண்டு, உலக மாணவர்கள் தினத்தின் கருப்பொருள் "மக்கள், கிரகம், செழிப்பு மற்றும் அமைதிக்காக கற்றல்" ஆகும். தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம், தனது வாழ்க்கை முழுவதும் அர்ப்பணிப்புடன் மாணவர்கள் மத்தியில் விரிவுரையாற்றினார்.
ஏவுகணைகள் மற்றும் நாட்டின் விண்வெளித் திட்டங்களின் வளர்ச்சிக்கு சிறப்பான பங்காற்றிய அவர் 'இந்தியாவின் ஏவுகணை மனிதன்' என்று அழைக்கப்படுகிறார். 2007 வரை ஜனாதிபதியாக பணியாற்றிய அவர் அதன் பிறகு கற்பிப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
ஜூலை 27, 2015 அன்று ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஐஐஎம், ஷில்லாங்கில் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது மாரடைப்பால் சரிந்து விழுந்து இறந்தார். அவர் மறைந்து பல வருடங்கள் ஆகியும், நாட்டின் சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளில் அவரது பங்களிப்புகள் இன்றும் நினைவில் உள்ளன.