india

img

உருமாறிய கொரோனாவுக்கு புதிய பெயர்கள்: டெல்டா, கப்பா, ஆல்பா, பீட்டா

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் வகைகளுக்கு டெல்டா, கப்பா என புதிய பெயர்களை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ்களை நாடுகளின் பெயரால் அழைப்பதில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அவற்றை குறிப்பிட கிரேக்க எழுத்துகளை புதிய பெயர்களாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

அதன்படி, இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் வகைகளுக்கு டெல்டா, கப்பா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு ஆல்பா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்காவின் கொரோனாவுக்கு பீட்டா என்றும் பிரேசில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு காமா எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

;