india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

புதுதில்லி
8 கி.மீ. தூரத்துக்கு  நிலம் சரிந்தது

வயநாடு நிலச்சரிவு சேதங்களை கார்ட்டோசாட்-3 என்ற இஸ்ரோ வின் தொலை உணர்வு செயற்  கைக் கோள் படம் பிடித்து அனுப்பியுள் ளது. முண்டகை யில் தொடங்கி இருவைப்புழா ஆறு வரை 8 கி.மீ.  தூரத்துக்கு நிலம் சரிந்து மழை, வெள்  ளத்தோடு கலந்து ஓடிய தடத்தின் படம்  வெளியிடப்பட்டுள்ளது. மேலும், நிலச்  சரிவு ஏற்படுவதற்கு முன்பு வயநாடு  எப்படி இருந்தது என்பதையும், கடல் மட்  டத்தில் இருந்து 1,550 மீட்டர் உயரத்தில்  நிலச் சரிவு ஏற்பட்டிருப்பதையும் இஸ்ரோ  புகைப்படம் துல்லியமாக எடுத்துக்காட்டி யுள்ளது.

சிம்லா
இமாச்சலப்பிரதேசத்தில் மேக வெடிப்பு
3 பேர் பலி; 40 பேர் மாயம்

இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்புடன் கூடிய மழை மிரட்டி  வருகிறது. சிம்லா மாவட்டத்தில் உள்ள சுமேஷ் கிராமத்தில் வியாழனன்று அதிகாலை 1 மணியளவில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இந்த மேகவெடிப்பால் சுமேஷ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதீத கனமழை பெய்த நிலையில், வீடு  மற்றும் சாலைகள் அடித்துச் செல்லப்பட் டன. இந்த கனமழையில் சிக்கி 2 பேர்  உயிரிழந்ததாகவும், 28 பேரைக் காண வில்லை என சிம்லா மாவட்ட காவல் கண்  காணிப்பாளர் சஞ்சீவ் குமார் காந்தி தக வல் தெரிவித்துள்ளார். இதே போல மண்டி  மாவட்டத்தில் உள்ள திக்கன் தாலுகோட் கிராமத்திற்கு அருகே ஏற்பட்ட மற்றொரு மேக வெடிப்பு கனமழையால் சிக்கி ஒரு வர் உயிரிழந்துள்ள நிலையில், 9 பேர்  காணவில்லை என மாவட்ட நிர்வாகம் தக வல் தெரிவித்துள்ளது. குலு மாவட்டத்தின்  ஜான் என்ற கிராமத்தில் ஏற்பட்ட மற்றொரு மேக வெடிப்பால் கனமழை புரட்டி யெடுத்த நிலையில், அங்கு ஏற்பட்ட சேத  விபரங்கள் குறித்து உறுதியாக எதுவும் தக வல் வெளியாகவில்லை.

புதுதில்லி 
பேரிடர் மேலாண்மை சட்டத்திருத்த மசோதா தாக்கல்

பேரிடர் மேலாண்மை சட்டம் 2005,  பேரிடர்களை திறம்பட நிர்வ கிப்பதற்காக இயற்றப்பட்டது ஆகும். பேரிடர் மேலாண்மை திட்டங் களை வரையறை செய்வதற்கும், அதை  முறையாக செயல்படுத்துவதை கண்கா ணிப்பதற்கும் தேவையான வழிமுறை களை ஏற்படுத்துவதே பேரிடர் மேலாண்மை சட்டத்தின் நோக்கமாகும். இந்நிலையில், பேரிடர் மேலாண்மை துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்  றும் குழுக்களின் பணிகளில் கூடுதலாக ஒருங்கிணைப்பை கொண்டு வரும் நோக்கில் பேரிடர் மேலாண்மை சட்டத்  திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள் ளது. இந்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தாக்  கல் செய்தார்.

வயநாடு
மீட்பு பணியில் அசத்தும் மாயா, மர்பி

நிலச்சரிவில் முற்றிலும் உருக்குலைந்  துள்ள முண்டக்கை பகுதியில் கேரள காவல்துறைக்கு சொந்தமான  மாயா, மர்பி இரண்டு மோப்ப நாய்கள்  மீட்பு பணியில் அசத்தி வருகின்றன. பெல் ஜியம் மெலனாய்ஸ் இனத்தைச் சேர்ந்த மாயாவும், மர்பியும் இறந்த மற்றும் உயி ருக்குப் போராடி வரும் நபர்கள் இருக்கும்  பகுதியை துல்லியமாகக் கண்டறிந்து காவல்துறைக்கு உதவி வருகிறது.

அகமதாபாத்
தலைப்பாகை அணிந்ததற்காக தலித் இளைஞர் மீது கொலை வெறித்தாக்குதல் 

பாஜக ஆளும் குஜராத் மாநிலத் தில் சிறும்பான்மையினர், தலித் மக்கள் மீதான தாக்கு தல் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் நிலையில், சாய்பாபூரில் தலைப்பாகை, சன்கிளாஸ் அணிந்து இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்டதற்காக தலித் இளைஞர் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்  தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 

சாய்பாபூரைச் சேர்ந்தவர் அஜய் என்ப வர் ஆட்டோ ரிக்சா ஓட்டும் தொழிலாளி ஆவார். தலித் சமூகத்தைச் சேர்ந்த அஜய்  கடந்த ஜூலை 18 அன்று சாய்பாபூரில் இருந்து ஹிமத் நகருக்கு ஆட்டோ ரிக்சா வில் சென்றார். நவநகர் பேருந்து நிலை யம் அருகே தர்பார் சமூகத்தைச் சேர்ந்த  கிர்பால்சிங் ரத்தோட், மனுசின் ரத்தோட் உட்பட 4 பேர் கொண்ட கும்பல் ஆட்டோ  ரிக்சாவை வழிமறித்து,”அஜய் நீ ஏன்  தலைப்பாகை மற்றும் சன்கிளாஸ் அணிந்  திருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டாய்?” என்று கேள்வி எழுப்பி னார். 

தொடர்ந்து, “நாங்கள் மட்டும் தான் (தர்பார்) தலைப்பாகை, சன்கிளாஸ் அணிய முடியும். தலித் சமூகத்தைச் சேர்ந்த நீ அத்தகைய புகைப்படத்தை ஒருபோதும் வெளியிடக்கூடாது” என  தாக்குதல் நடத்தியுள்ளனர். உள்ளூர் மக்  கள் தலையிட்டால் அஜய் காயத்துடன் உயிர் தப்பினார். அஜய் அளித்த புகாரின்  பேரில் ஹிமத்நகர் ஊரகப் போலீஸார் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் செய்துள்ள நிலையில், அடையாளம்  தெரிந்தும் சாதிவெறிக் குண்டர்களை  போலீசார் இன்னும் கைது செய்யவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை
பூஜா ஹெட்கரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

மகாராஷ்டிராவில் பயிற்சி ஐஏஎஸ்  அதிகாரியான பூஜா ஹெட்கர் தனது காரில் சுழலும் சிவப்பு விளக்கு பொருத்தி சர்ச்சையில் சிக்கிய தால் பணியிட மாற் றம் செய்யப்பட்ட  நிலையில், தொட ர்ந்து மாற்றுத்திற னாளிக்கான போலி சான்றிதழ் சமர்ப்  பித்து ஐஏஎஸ் ஆன தும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பூஜாவின் ஐஏஎஸ் பயிற்சியை மாநில  அரசு நிறுத்தியது. குடிமைப் பணிகள்  தேர்வின்போது பொய்யான ஆவணங்  களை சமர்ப்பித்தது தொடர்பாக, பூஜா விற்கு யுபிஎஸ்சி விளக்கம் கேட்டு நோட்  டீஸ் அனுப்பியது. பூஜாவின் முறைகேடு  சம்பவம் வெளியானவுடன் யுபிஎஸ்சி தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்து மனோஜ் சோனி ஓட்டம் பிடித்தார். இத னால் மோடி அரசின் ஆட்சி நிர்வாகம் மீது பல்வேறு சந்தேகங்கள் கிளம்பின.

இந்நிலையில், முறைகேடு சம்பவங்  களை குறிப்பிட்டு தில்லி குற்றப்பிரிவு போலீசில் பூஜாவிற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் பிஎன்எஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு சட்டப் பிரிவுகளில் மோசடி, மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்துவது ஆகிய குற்றச்சாட்டுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து பூஜா வின் ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்தது  யுபிஎஸ்சி.இனிமேல் போட்டித் தேர்வு களில் பூஜா பங்கேற்கவும் நிரந்தரத் தடை  விதித்து உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் கைது நடவடிக்கையில் இருந்து தப்ப பூஜா ஹெட்கர் தாக்கல்  செய்த முன்ஜாமின் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தர விட்டது.