நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நாடு முழுவதும் எதிர்ப்பு தீவிரமடைந் துள்ள நிலையில், அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வை நடத்து வதற்கான சாத்தியக்கூறுகளை அரசு பரி சீலித்து வருவதாக ஒன்றிய அரசின் மூத்த அதிகாரிகள் “தி சண்டே எக்ஸ்பிரஸ்” செய்தி நிறுவனத்திடம் கூறியதாகவும், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடு களை தடுக்க தேசிய தேர்வு முகமையும் ஆன்லைனில் நீட் தேர்வை நடத்த பரி சீலனை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் நீட் தேர்வை ஆன்லைன் முறைக்கு மாறுவ தற்கான இறுதி முடிவு தேசிய மருத்துவ ஆணையத்தின் கையில் உள்ளதால் இது தொடர்பான அறிவிப்பு எப்பொழுது வெளியாகும் என்பதில் பல்வேறு சிக்கல் எழுந்த்துள்ளது.