தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகள் ஜூன் 7 மற்று 8 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்தது. ஏற்கனவே ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கில்களை மாணவர்கள் சந்தித்து வந்த நிலையில், கடைசி நேரத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக நாடு முழுவதும் நுழைவுத் தேர்வு ஒத்திவைப்படுவதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேர்வு எழுதுவதற்காகத் தேர்வு மையம் அமைந்துள்ள நகரங்களுக்கு வந்த மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் பல மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், திடீரென நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.