நீட் நுழைவுத்தேர்வை முழுமையாக ஆன்லைனில் நடத்த உயர்மட்ட குழு பரிந்துரைத்துள்ளதாக உயர்க் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
சுகாதார அமைச்சகம்தான் நீட் தேர்வின் நிர்வாக அமைச்சகம். எனவே தேர்வை எப்படி நடத்த வேண்டுமென சுகாதார அமைச்சகத்துடன் ஆலோ சித்து வருகிறோம். 2 சுற்று பேச்சு வார்த்தை முடிந்துள்ளது.
அடுத்த ஆண்டில் நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவதா அல்லது வழக்கமான முறை யில் ஆப்லைனில் நடத்துவதா என விரை வில் முடிவெடுக்கப்படும் என அவர் கூறி யுள்ளார். மேலும் உயர்கல்வி நுழைவுத்தேர்வு களில் கவனம் செலுத்துவதற்காக, அடுத்த ஆண்டிலிருந்து ஆட்சேர்ப்பு தேர்வுகளை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு,
பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான கியூட் நுழை வுத்தேர்வு, ஜேஇஇ உள்ளிட்ட பல்வேறு உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வு களையும், ஜவகர்லால் நேரு பல் கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு ஒன்றிய அரசு நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு தேர்வுகளையும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது.
ஆனால் நீட் உட்பட ஒன்றிய அரசின் பல தேர்வுகளில் தொடர்ந்து முறைகேடு கள் அரங்கேறி வருகின்றது. இந்த முறை கேடுகளின் காரணமாக கியூட், நீட் உள்ளிட்ட தேர்வுகள் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. இதற்கு மாணவர் அமைப்புகள், பெற்றோர்கள் என பலரும் கடுமை யான எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில் தேசிய தேர்வு முகமையில் தேவையான சீர்திருத்தங்கள் செய்ய முன்னாள் இஸ்ரோ தலைவர் ராதா கிருஷ்ணன் தலைமையில் உயர்மட்டக் குழுவை கடந்த ஜூலை மாதம் ஒன்றிய பாஜக அரசு அமைத்தது.
இக்குழு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது. இந்நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய தேர்வு முகமையை மறுசீரமைக்கும் பணி கள் 2025 இல் துவங்கும். அடுத்த ஆண்டு முதல் ஆட்சேர்ப்பு தேர்வுகளை இம் முகமை நடத்தாது. உயர்கல்வி நுழை வுத்தேர்வுகளில் மட்டுமே கவனம் செலுத்தும். உயர்மட்ட குழுவின் பரிந் துரை அடிப்படையில், எதிர் காலத்தில் நுழைவுத்தேர்வுகள் கணினி மயமாக்கப்படும். நவீன தொழில்நுட்ப வசதிகள் பயன்படுத்தப்படும்.
எந்த சிறு தவறுகளும் நடக்காமல் இருப் பதை உறுதி செய்யவும் புதிதாக 10 பதவி கள் உருவாக்கப்படும்’’ என்று கூறி யுள்ளார். எனினும் பாஜக ஆட்சியில் கல்வித்துறையில் தனியார் மயமும் ஊழலும் மோசடிகளும் மிக மோச மான கட்டத்திற்கு சென்றுவிட்ட நிலை யில் அரசு இதனை முறையாக சரி செய்யுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த வேண்டும். நுழைவுத்தேர்வுகளை நடத்து வது மட்டுமே என்டிஏவின் முக்கிய பணி யாக இருக்க வேண்டும்.
தேர்வு பாது காப்பு, கண்காணிப்பு, செயல்பாடு, தொழில்நுட்பங்கள் என தேசிய தேர்வு முகமையில் புதிதாக 10 பதவிகள் உரு வாக்கப்பட வேண்டும். நாட்டின் அனை த்து மாவட்டங்களிலும் பாதுகாப்பான அரசு தேர்வு மையங்களை உருவாக்க வேண்டும். தேர்வு மையங்களுக்கென புதிய ஒதுக்கீடு கொள்கைகளை உரு வாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில பரிந்துரைகளை ராதா கிருஷ்ணன் தலைமையிலான உயர் மட்டக்குழு வழங்கியுள்ளது.