india

img

உயிரைக் காப்பதே எனது மதம்! மதுரை கன்வார் யாத்திரையில் 5 இந்து பக்தர்களின் உயிர் காத்த முஸ்லிம் காவலர்

வடமாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் கன்வார் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டின் கன்வார் யாத்திரைக்கு செல்லும் பாதைகளில் பெயர்ப் பலகையுடன் உணவுப் பொருள் கடை வைக்க வேண்டும் என்றும்,  இறைச்சிக் கடை வைக்கக் கூடாது என்றும் பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநில  அரசு சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளி யிட்டது. தொடர்ந்து உத்தரகண்ட், மத்தியப்பிர தேச அரசுகளும் அதே உத்தரவை பிறப்பித்தன. இது முஸ்லிம் மக்களுக்கு மற்றும் அர சியலமைப்புக்கு எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதை தொடர்ந்து உச்சநீதிமன்றம் கன்வார் யாத்திரை மீதான உத்தரவுக்கு தடை விதித்தது.

இந்நிலையில், கன்வார் யாத்திரை மேற்கொண்ட இந்து பக்தர்களை ஒரு முஸ்லிம் காவலர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில் கங்கை நீரை எடுக்கும்போது நீரில் மூழ்கிய 5 பக்தர்களை காப்பாற்றியுள்ளார். அம்மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) தலைமை கான்ஸ்டபிள் ஆஷிக் அலி. கான்ஸ்டபிள் ஆஷிக் அலி தனித்தனி சம்பவங்களில் ஐந்து பக்தர்களை காப்பாற்றியுள்ளார்.

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறு வனத்திடம் ஆஷிக் அலி கூறுகையில், “மக்களின் உயிரைக் காப்பதே எனது மதம். நீரில் மூழ்கும் ஒருவரின் சாதி அல்லது மதத்தைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. என்னைப் பொறுத்தவரை, அவர் ஒரு மனிதர். அவரது உயிரைக் காப்பாற்றுவதே எனது மதம். ஒருவரைக் காப்பாற்றும் போது, எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது” என்று கூறி நெகிழ வைத்துள்ளார்.

முஸ்லிம் மக்களை புறந்தள்ளும் அவர்களிடம் இருந்து உணவு உண்ண மாட்டோம் என்பதை மறைமுகமாக அறிவிக்கும் நோக்கத்திலேயே கன்வார் யாத்திரைக்கு செல்லும் பாதைகளில் பெயர்ப் பலகையுடன் உணவுப் பொருள் கடை வைக்க வேண்டும் என பாஜக அரசுகள் அறிவித்தன. ஆனால் கன்வார் யாத்திரை பக்தர்களின் உயிரை மதப் பாகுபாடின்றி ஒரு முஸ்லிம் வீரர்  காப்பாற்றியுள்ள சம்பவம் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.