india

img

மாநிலங்களின் அதிகாரங்களை பறித்துத் தின்னும் ஒன்றிய அரசு

புதுதில்லி,பிப்.8- மாநிலங்களின் அதிகாரங்களை ஆக்கிர மிக்கும் வகையில் ஒன்றிய அரசு பல சட்டங் களை தொடர்ந்து இயற்றி வருவதாக கேரள முத லமைச்சரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து மாநில உரிமைகள் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. எதிர்க்கட்சிகள் ஆளக் கூடிய மாநிலங்களுக்கு உரிய நிதி பகிர்வை அளிக்க மறுப்பது, பேரிடர் நிவாரண நிதியை ஒது க்க மறுப்பது, ஜி.எஸ்.டி. வரியில் உரிய பங்கீட்டை அளிக்க மறுப்பது, மாநிலங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது என கூட்டாட்சி கோட்பாட்டிற்கு விரோதமான நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. அதுமட்டுமின்றி, மாநில ஆளுநர்களை பயன்படுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர  மறுப்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அர சாங்கத்திற்கு எதிராக போட்டி அரசாங்கமாக செயல்பட வைப்பது உள்ளிட்ட ஜனநாயக விரோத - எதேச்சதிகார நடவடிக்கைகளையும் ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.

இவற்றுக்கு எதிராக வியாழனன்று (8.2.2024)  புதுதில்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பி னர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து  கொள்ளும் மாபெரும் தர்ணா போராட்டம் நடை பெற்றது. இதில் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்,  தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி. ராஜா, கேரள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தில் பினராயி விஜயன் ஆற்றிய உரை வருமாறு;

நாம் இன்று இந்தியக் குடியரசின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தில் இருக்கிறோம். ‘மாநிலங்களின் ஒன்றியம்’ எனக் கருதப்பட்ட ஒன்றிய அரசு ஜனநாயகமற்ற முறையில்  ‘மாநில அரசுகளை படிப்படியாக முடக்கி வருகிறது. நாடு முழுவதும், குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இருந்து வரும் எதிர்ப்பலையில் இருந்து இதனை நாம் அறிந்து கொள்ளமுடியும். ஒன்றிய அரசின் அராஜகத்திற்கு எதிராக மாநில அரசுகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யவும், இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்.   இன்று நாம் ஒரு புதுப்பிக்கப்பட்ட போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.  இது மாநிலங்களை ஒன்றிய அரசு சமமாக நடத்துவதை உறுதி செய்வதற்கான நிலைமையை நிச்சயம் ஏற்படுத்தும். 

ஒன்றிய – மாநில அரசுகளின் உறவுகளில் சமமான நிலையை நிலைநாட்டவும் இந்தப் போராட்டம் உதவும். 2024, பிப்ரவரி 8 ஆம் தேதி  இந்திய வரலாற்றில் சிகப்பு எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய முக்கிய நாளாக இருக்கப் போகிறது. பல்வேறு மாநில அரசுகள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் அன்பான வரவேற்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

கூட்டுறவு துறையிலும் தலையீடு
இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக இருப்பதை உறுதி செய்வதற்கான போராட்டம் இதுவாகும். கூட்டாட்சி மீதான நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமையட்டும். பல ஆண்டுகளாக, ஒன்றிய அரசு  பல துறை களில் மாநிலங்களின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளை ஆக்கிரமிக்கும் சட்டங்களை உரு வாக்கி வருகிறது. அரசியலமைப்பில் மாநிலங்களின் பட்டியலில் உள்ள சட்டம் ஒழுங்கு உள்பட விவசாயம், கல்வி, மின்சாரம், கூட்டுறவு போன்றவற்றில் மாநிலங்களின் உரிமைகளை முடக்கும் வகையில் ஒன்றிய அரசு சட்டங்களை இயற்றியுள்ளது. ஒன்றிய அரசின் கீழ் கூட்டுறவு அமைச்சகம் கூட உருவாக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களை மதிக்காத  மோடி அரசு 
  மாநிலங்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில், மாநிலங்களின் கருத்தைக் கேட்காமல், அவர்களின் ஒப்புதலைப் பெறாமல், பன்னாட்டு ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. இவை அனைத்தும் மாநிலங்களின் உரிமைகள் எப்படி நசுக்கப்படுகின்றன என்பதற்கும், ஜன நாயகமற்ற முறையில் மாநிலங்களை ஒன்றிய அரசு எப்படி நசுக்கி வருகிறது என்பதற்கும் எடுத்துக்காட்டுகள்.  இருப்பினும், மாநிலங்களின் நிதி ஆதாரங்களை ஒன்றிய அரசு விழுங்கி வருவ தால் இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பு படிப்படி யாக சீர்குலைக்கப்பட்டு வருகிறது. கூட்டாட்சித் தத்துவத்தைப் பற்றிப் பூசி மெழுகும் அதே நபர்கள், மாநிலங்களுக்கு நிதிக் கமிஷன் மூலம் ஒதுக்க வேண்டிய நிதியை குறைக்க முயற்சிக் கிறார்கள்.  அதற்கு மேல், ஒன்றிய  அரசின் சொந்தத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு ஆண்டு தோறும் குறைந்து வருவதையும் நாம் பார்க்கி றோம், அதே நேரத்தில் மாநிலங்கள் மேலும் மேலும்  நிதிச்சுமையை ஏற்க வேண்டிய கட்டா யத்தில் உள்ளன. 

மொத்தச் செலவுகளை  சுமக்கும் மாநில அரசுகள்
ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, நாட்டின்  மொத்தச் செலவுகளில் கணிசமான 65 சத வீதத்தை மாநிலங்கள் ஈடுகட்ட வேண்டும், இதில் ஒன்றிய அரசின் பங்களிப்பு 35 சதவீதம் மட்டுமே. ஆனால் வருவாய்ப் பகிர்வு என்று வரும் போது ஒன்றிய அரசு தலைகீழாக செயல்படு கிறது. ஒன்றிய அரசு 65 விழுக்காட்டை எடுத்துக் கொண்டு, மாநிலங்களுக்கு 35 விழுக்காட்டை  மட்டுமே வழங்குகிறது.  இதனால் மாநிலங்கள் 35 விழுக்காடு வருவாயை வைத்துக்கொண்டு 65 விழுக்காடு செலவுகளை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன.  சில நாட்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் கூட, மூலதனச் செலவினங்களுக்காக வழங்கப்பட்ட கடன்கள் குறைக்கப்பட்டுள்ளதால், மாநிலங்கள் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றன. 

முத்திரை குத்திக்கொள்ளும்  கேவலமான ஒன்றிய அரசு 
பல மத்திய திட்டங்களில் மாநிலங்களை விட ஒன்றிய அரசு குறைந்த பங்கைக் கொண்டி ருந்தாலும், அவற்றில் அவர்களது திட்டங்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முத்திரை குத்துவதில் அவர்கள் ஆர்வமாக உள்ளனர். பிராண்டிங் இல்லை என்றால் அதாவது அது ஒன்றிய அரசின் திட்டம் என  விளம்பரம் செய்யா விடில் மாநிலங்களுக்கு   நிதி வழங்கப்படாது என்று சொல்லும் அளவிற்கு கூடச் செல்கிறார்கள்.  பிராண்டிங் என்றால் அடிப்படையில்  திட்டங்களில் லேபிள் பொறிப்பதாகும். இப்படிச் செய்வதால், இதுபோன்ற திட்டங்களின் பயனாளிகளின் சுயமரியாதை கேள்விக்குறியாகி உள்ளது. 

மாநில அரசின் திட்டங்களில் தனது பெயரை போட்டுக்கொள்ளும் மோடி அரசு 
வளர்ச்சியையும் நலனையும் மக்களின் உண்மையான உரிமைகளாகப் பார்க்கும் எந்தப்  பொறுப்பான அரசாங்கமும் தங்கள் சொந்தக் குடிமக்களை இப்படி அவமானப்படுத்த முடி யாது. கேரளாவின் லைஃப் மிஷன் திட்டத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டால் அந்த திட்டத்தின் கீழ் இதுவரை 3,74,508 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.இதற்காக மொத்தம் ரூ. 17,104.87 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில்  ஒன்றிய அரசின் பங்கு வெறும் ரூ. 2,081.69 கோடி மட்டுமே.  அதாவது வெறும் 12.17 விழுக்காடு. இதில்  87.83 சதவீதத்தை கேரள அரசும், கேரளாவில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த திட்டத்தில் கூட  தனது பெயர் வைக்க வேண்டும் என்று மாநில அரசை  ஒன்றிய அரசு கட்டாயப்படுத்துகிறது. அப்படி  வைக்கவில்லை என்றால் தற்போது வழங்கப் படும் சிறிய அளவிலான நிதியை கூட நிறுத்தி வைப்போம் என்று கூறுகிறார்கள்.  தங்கள் பெயர் பலகையை வைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு கோருவதால், இந்த திட்டம் அவர்களின்  நன்கொடையில் நடப்பதாக எந்த மாயையிலும் இருக்க வேண்டாம். 

ஏழைகளின் சுயமரியாதைக்கு அவமதிப்பு 
ஒரு ஏழைக்கு மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் கட்டித்தரும் வீட்டிற்கு வேறு ஒரு நபரின் பெயரை வைத்தால் அது எந்த அளவுக்கு கேவலமாக இருக்கும் என்பதை கற்பனை செய்து  பாருங்கள். அத்தகைய அடையாளத்தை வைப்பது சம்பந்தப்பட்ட குடும்பத்தின் சுயமரியா தையை அவமதிப்பதாகும், மேலும் தலைமுறை தலைமுறையாக அவர்கள் இந்த களங்கத்தை சுமக்க வேண்டிய மிக மோசமான நிலையில் இருக்கவேண்டியிருக்கும். அதை கேரள மாநிலம் எந்த வகையிலும் அனுமதிக்காது என்பதை மிகத் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். செஸ் மற்றும் கூடுதல் வரி வாயிலாக ஒன்றிய அரசின்  வருவாய் செங்குத்தாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அவை பகிர்ந்தளிக்கக் கூடிய தொகுப்பின் கீழ் வராததால், மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. 2017-18 மற்றும் 2022-23 க்கு இடையில் பல்வேறு பொருட்களுக்கு ஒன்றிய அரசு விதித்த முக்கிய செஸ் மற்றும் கூடுதல் வரியின் வசூல் 133 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது ஐந்தாண்டு காலத்தில் ரூ.2,18,553 கோடியிலிருந்து  5,10,549 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.  இத்தனை வருவாயைக் குவித்தாலும், அதில் இருந்து ஒரு பைசா கூட மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பகிர்ந்தளிக்கவில்லை. 

ஜிஎஸ்டி - சொன்னதும் செய்ததும்
ஜிஎஸ்டி இழப்பீடு என்ன ஆனது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய இந்ததொகை தொடர்ந்து தாமதமாகி வருகிறது, எங்களில் பல மாநில அர சுகள் ஒன்றாக உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்தபோதுதான் ஒன்றிய அரசு நிலு வைத் தொகையை விடுவித்தது.  ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும்போது கணிக்கப்பட்ட வருவாய் விகிதம் இன்னும் எட்டப்படாத நிலை யில் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு ரத்து  செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப் பட்டபோது, நிதியமைச்சகத்தின் சில கணக்கீடுகள், வருவாய் சமநிலையாக இருக்க, சராசரி ஜிஎஸ்டி விகிதம் குறைந்தது 17 சதவீதமாக இருக்க வேண்டும் என்று கருதியது. அந்த குறிப்பிட்ட அளவுகோலை மாநிலங்கள் அடையும் வரை, ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநிலங்களுக்கு தர ஒன்றிய அரசு கடமைப்பட்டுள்ளது. தற்போதைய சராசரி விகிதம் 11.4 சதவீதம் மட்டுமே. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு மாநிலங்கள் தங்களது கணிசமான வருவாய் ஆதாரங்களையும் நிதி உரிமைகளையும் விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. இப்போது, நமக்குச் சொந்தமானது மறுக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய மாநில அரசுகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.