புதுதில்லி, செப். 9 - பொருளாதார நிபுணர் பிரணாப் சென் தலைமையிலான 14 பேர் கொண்ட புள்ளி யியல் நிலைக்குழுவையே (Standing Committee on Statistics - SCoS) அடியோடு ஒன்றிய பாஜக அரசு கலைத்துள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான காலதாமதம் குறித்து, புள்ளியியல் நிலைக்குழு தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வந்த பின்னணியில், கடுப்படைந்த நரேந்திர மோடி அரசு, குழுவையே கலை த்து எதேச்சதிகாரத்தில் ஈடுபட்டுள்ளது.
புள்ளியியல் நிலைக்குழு தன்னிச்சையாக கலைப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யும் முறை, மாதிரி வடிவமைப்பு, கணக்கெடுப்புக் கான கருவிகள் உள்ளிட்டவை குறித்து ஒன்றிய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற் காக பொருளாதார நிபுணரும், முன்னாள் தலைமை புள்ளியியல் நிபுணருமான பிரணாப் சென் தலைமையில் 14 பேர் கொண்ட நிலைக்குழுவை ஒன்றிய பாஜக அரசு கடந்தாண்டு ஜூலை மாதம் நிய மித்தது. இந்நிலையில், முறையான காரண மின்றி, உறுப்பினர்களுக்கு கூட தகவல் அளிக்காமல், அந்தக் குழுவையே ஒன்றிய அரசு கலைத்துள்ளது.
ஒன்றுக்கொன்று முரண்பாடு ஏற்படுவதாக காரணம்
குழுவைக் கலைப்பதாக உறுப்பினர் களுக்கு தேசிய மாதிரி ஆய்வுகள் துறை யின் (National Sample Survey Office -NSSO) இயக்குநர் கீதா சிங் ரத்தோர் மின்ன ஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “தேசியப் புள்ளியியல் ஆணையத்தின் (NSC) பரிந்துரையின்படி, தேசிய மாதிரி ஆய்வுகள் துறையின் கணக்கெடுப்பு தொடர்பான சிக்கல்களைக் கவனிக்க, தேசிய மாதிரி ஆய்வுகளுக்கான வழிகாட்டு தல் குழுவை (NSS) அமைச்சகம் அண்மை யில் அமைத்தது. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வழிநடத்தல் குழு மற்றும் நிலைக்குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் ஒன்றோடு ஒன்று முரண்படு வதால், ஜூலை 13 அன்று எடுத்த முடி வின்படி, நிலைக்குழுவை (SCOS) கலைக்க அமைச்சகம் முடிவெடுத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
கேள்வி கேட்டதால் ஆத்திரமடைந்த அரசு
இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள- கலைக்கப்பட்ட நிலைக்குழுவின் தலைவர் டாக்டர் பிரணாப் சென், “குழுவை கலைப் பதற்கு உறுப்பினர்களுக்கு எந்த காரண மும் தெரிவிக்கப்படவில்லை” என்றும், அதேநேரம், “தரவுகளின் முக்கிய ஆதார மான மக்கள்தொகை கணக்கெடுப்பு ஏன் இன்னும் நடத்தப்படவில்லை” என்று கூட்ட ங்களில் தாங்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்ததாக தெரிவித்துள்ளார்.
1870 முதல் ஒவ்வொரு பத்து ஆண்டு க்கும் ஒருமுறை இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வரு கிறது, கடைசியாக 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்தது, 2021-இல் திட்டமிடப்பட்டது. கொரோனா தொற்றுநோய் காரணமாக ஆரம்பத்தில் தாமதமானது. ஆனால், அதன் பிறகும் கூட இப்போது வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிவிப்பை மோடி அரசு வெளியிடத் தயாராக இல்லை. தற்போது ஆலோசனை வழங்கும் குழுவையும் கலைத்துள்ளது.