புதுதில்லி, மார்ச் 10-
மஹிந்திரா நிறுவனம், வாகன வணிகத்தில் பெரும் சரிவினைக் கண்டதால் 300 ஊழியர்கள் பணி நீக்கம் செய்துள்ளது.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா குழுமம் உலகம் முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனம் பல துறைகளில் தனது வணிகத்தினை செய்து வருகின்றது.
இந்நிலையில், கொரோனா நோய் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் மஹிந்திரா குழுமம், வாகன வணிகத்தில் பெரும் சரிவினைக் கண்டதுள்ளது.
குறிப்பாக, மஹிந்திரா குழுமத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு, இந்த நிதியாண்டில் இதுவரை 27.52 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
இதனால், பல உயர் அதிகாரிகள் உள்பட சுமார் 300 பேர் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதா அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.