கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் எல்.டி.எப் வேட்பாளர் கே.ஜே.ஷைன், மராடில் நடந்த குடும்ப கூட்டத்தில் மூதாட்டியை கட்டித்தழுவிய காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது.
தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தி வரும் நிலை யில், கர்நாடகா, ஆந்திரா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் ஏப்ரல் 6 வரை வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளின் பய ணச்சீட்டுகளை யுபிஐ மூலம் ஆன்லைனில் பெறும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தி யுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மக்களவை தொகுதி யின் காங்கிரஸ் வேட்பாளராக ஓய்.எஸ்.ஷர்மிளா அறிவிக்கப்பட்டுள்ளார்.
மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலு கையை நீக்கியதன் மூலம் கடந்த 4 ஆண்டு களில் ரூ.5,800 கோடி இந்திய ரயில்வேக்கு மிச்ச மாகி உள்ளது என இந்திய ரயில்வே தகவல் தெரி வித்துள்ளது.
ராம நவமியை முன்னிட்டு வரும் ஏப்ரல் 17 அன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற விருந்த கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகளுக்கு இடை யேயான போட்டி ஏப்ரல் 16க்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
பாஜகவில் இணையாவிட்டால் கைது செய்யப்படுவேன் என எனக்கு மிரட்டல் வருகிறது. நான் உட்பட ஆம் ஆத்மியின் மேலும் சில தலைவர்கள் குறிப்பாக, சவுரப் பரத்வாஜ், துர்கேஷ் பதக், ராகவ் சதா உள்ளிட்டோர் தேர்த லுக்கு முன் கைது செய்யப்படலாம் என தில்லி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
அடுத்தடுத்து விமானங்களை திடீரென ரத்து செய்வது, குறிப்பிட்ட நேரத்தில் விமானங் களை இயக்காதது என்று விஸ்தாரா விமான நிறு வனம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது.
அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும். அதற்கு மக்களவை மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு பலம் வேண்டும். அதற்கு பெரியள வில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண் டும் என ராஜஸ்தான் மாநில நகவுர் தொகுதி பாஜக வேட்பாளர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள் ளார்.