india

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

2023 உலக பட்டினிக் குறியீடு பட்டியலில் மொத்தமுள்ள 125 நாடுகளில் இந்தியா 111வது இடத்தைப் பெற்று, பசி பட்டினியில் இருப்பவர்கள் மிக அதிகம் உள்ள நாடு என்ற அவப்பெயரைப் பெற்றது. இப்படிப்பட்ட நிலையில்தான், மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ் இந்தியாவில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டு, பசி, பட்டினி அற்றவர்களாக மாற்றப்பட்டுவிட்டதாக நிதி ஆயோக் அப்பட்டமான ஒரு பொய் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை உண்மையென்றால் இப்போது அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு 81.35 கோடி மக்களுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியின் அரசு அறிவித்திருப்பது ஏன்? 
ஏனென்றால், 25 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்டுவிட்டதாக கூறுவது பொய்; அது மக்களை ஏமாற்றுவதற்காக வெளியிடப்பட்ட ஒரு வெற்று அறிக்கை, அவ்வளவே!