புதுதில்லி கேரள மாநிலத்தின் வய நாடு மாவட்டத்தில் மேக வெடிப்புக்கு நிகராக பெய்த கனமழை காரணமாக சூரல் மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய பகுதிகளில் கடந்த ஜூலை 30 அன்று நள்ளிரவு கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச் சரிவில் சிக்கி 358 பேர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 200க்கும் மேற்பட்டோரை தேடும் பணி 5ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரி வில் சிக்கி உயிர்பிழைத்த 3000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம் களில் தங்கியுள்ளனர்.
அமித் ஷா உளறல்
மக்களவை, மாநிலங்களவை யில் 3 நாட்களுக்கு முன் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கி ரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.,க் கள்,”வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவித்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷா மாநி லங்களவையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகள் மற்றும் கோரிக்கைக்கு பதில் அளிக்காமல்,”கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கையை ஒன்றிய அரசு கடந்த ஜூலை 23 அன்றே வழங்கியது. 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என்றும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக வும், சேறும் சகதியுமாக மழைநீர் வரலாம் என்றும், அதில் புதைந்து மக்கள் உயிரிழக்கக் கூடும் என் றும் தெரிவிக்கப்பட்டது” எனக் கூறி னார்.
இந்திய வானிலை மையம் மறுப்பு
அமித் ஷாவின் கருத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜ யன்,”இந்திய வானிலை ஆய்வு மையம் வயநாடு மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை மட்டுமே விடுத்தது. எனினும் வயநாட்டில் 500 மில்லி மீட்டர் மழை பெய் துள்ளது. செவ்வாயன்று காலை நிலச்சரிவு ஏற்பட்ட பின்னரே வய நாடு மாவட்டத்துக்கு சிவப்பு எச்ச ரிக்கை விடுக்கப்பட்டது. குற்றம் சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல” எனக் கூறி பதிலடி கொடுத்தார்.
அதே போல இந்திய வானிலை ஆய்வு மையமும் நிலச்சரிவு ஏற் பட்ட நாளன்று மட்டுமே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது என் றும், மற்ற நாள் ஆரஞ்சு எச்ச ரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது என அறிக்கை வெளியிட்டது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் அமித் ஷா கூறியது தவறான தகவல் என நிரூபணமாகியுள்ளது.
அமித் ஷாவுக்கு எதிராக நோட்டீஸ்
இந்நிலையில், வயநாடு நிலச் சரிவு முன்னெச்சரிக்கை நடவ டிக்கை தொடர்பாக அமித் ஷா அளித்த தகவல்கள் தவறானவை என்றும், இதற்கு ஆதாரமாக இந்து ஆங்கில நாளேட்டின் தரவு களையும் சேர்த்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மாநிலங்களவைத் தலை வர் ஜகதீப் தங்கரிடம் நோட்டீஸ் அளித்துள்ளார்.
“ஒரு அமைச்சர் அல்லது உறுப் பினர் அவையை தவறாக வழி நடத்துவது விதிமீறல் மற்றும் அவையை அவமதிக்கும் செயல் ஆகும். இதனால் அமித்ஷா மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளிக்கப்பட்டுள் ளது” என ஜெய்ராம் ரமேஷ் செய்தி யாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
வானிலை அறிவிப்பு பற்றி அமித் ஷாவுக்கு தெரியவில்லை
இந்திய வானிலை ஆய்வு மையம் தனது மழைக்கால அறிக்கை யில், “வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இந்த பகுதி யில் தோராயமாக இத்தனை செண்டி மீட்டரில் அதீத (சிவப்பு), மிதமான (ஆரஞ்சு), லேசான (மஞ்சள்) அளவுகளில் கனமழை பெய்யும், இடியுடன் கூடிய கனமழை பெய்யும், தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” என்று மட்டுமே கூறப்படும். அவ்வளவு தான். ஆனால் அமித் ஷா கூறியபடி நிலச்சரிவு, உயிர் சேதம், சரியாக இவ்வளவு செ.மீ மழை பெய்யும் என்றெல்லாம் இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் அவ்வள வாக குறிப்பிடாது. ஆனால் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசியல் ஆதாயத்திற்காக வயநாடு நிலச்சரிவு தொடர்பாக முன்கூட் டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், நடந்து முடிந்த சம்ப வங்களை திரைக்கதையாக ஜோடித்து அதனை முன்னெச்சரிக்கை என்று கூறியுள்ளார். இதன்மூலம் அமித் ஷாவிற்கு இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கைகள் எப்படி வெளியாகும் என்பது கூட தெரி யவில்லை. மேலும் அமித் ஷாவுக்கு வானிலை ஆய்வறிக்கை தொடர் பாக புரிதலும் இல்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது.