புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு ரேசன் கடைகளை மூடிவைத்துள்ளது கண்டனத்திற்கு உரியது. ஒன்றிய பாஜக அரசு ரேசன் கடைகளை மூடிவைத்து புதுச்சேரியை பரி சோதனை கூடமாக மாற்றுவதை மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. ரேசன் கடைகளை திறக்கும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் ஒயாது என்று புதுச்சேரி அரசுக்கு எதிரான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.