india

img

திரிபுராவை அச்சம் ஆள்கிறது; அமைதி தொலைந்தது

திரிபுரா மக்களை பயத்தில் ஆழ்த்தியும் மத அடிப்படையில் பிளவுபடுத்தியும் பாஜக-ஐபிஎப்டி ஆட்சி நடக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திரிபுரா மாநில செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி கூறினார். திருவனந்தபுரத்தில் நடை பெற்றுவரும் சிபிஎம் மத்தியக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவர் தேசாபிமானி செய்தியாளர் வி.எஸ்.விஷ்ணு பிரசாத்துக்கு அளித்த நேர்காணலின் அம்சங்கள்: பாஜக-ஐபிஎப்டி ஆட்சியின் கீழ்  திரிபுராவில் அமைதியான வாழ்க்கை  சீர்குலைந்துள்ளது.

கடந்த 6 ஆண்டு களில் சிபிஎம் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் செயல்பாட்டாளர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். பல அலு வலகங்கள் இடிக்கப்பட்டன. இதில் இன்னும் ஒருவர் கூட பிடிபடவில்லை. கடந்த 6 ஆண்டுகளில் பாஜக அரசு நடத்தும் வன்முறையைத் தவிர வேறு எதுவும் அங்கு செயல்படுத்தப் படவில்லை. இதற்கு முன்பு நடந்த  அரசுகளின் அனைத்து சாதனை களையும் அழித்துவிட்டு, ஆர்எஸ் எஸ் நிகழ்ச்சி நிரல்களை மட்டுமே  தற்போதைய அரசு செயல்படுத்தி வருகிறது.

எதிர்க்கட்சிகளின் கருத்துக் களுக்கு செவிசாய்ப்பதில்லை. சட்ட சபையிலும் எதிர்க்கட்சிகள் நசுக்கப் படுகின்றன. பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் வலம் வந்த திப்ர மோத்தா கட்சியின் தற்போதைய நகர்வுகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அவர்களை தங்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அடுத்த மக்களவைத் தேர்தலில், இடதுசாரிகள் தலைமையிலான கூட்டணி, இரு தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான தீவிரமான பணிகளை மேற்கொள்வோம். மக்களை முட்டாளாக்கும் அரசின் கொள்கைகளை அம்பலப்படுத்தும் பிரச்சாரங்களிலும் போராட்டங்களி லும் சிபிஎம் தீவிரமாக உள்ளது.

இளம் தலைமுறையினரும் இடதுசாரி களுடன் உள்ளனர். கல்வித்துறை யில் ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டத்தை அமல்படுத்தும் முடிவு, மநுவாதம், வேலையில்லா திண்டாட்டம் ஆகி யவை இளைஞர்களை நிம்மதி யிழக்கச் செய்கின்றன. முதல் ஆண்டில் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என முதல்வர் மாணிக் சாஹா அறிவித் திருந்தார். வேலை வழங்கப்பட வில்லை என்பது மட்டுமல்லாமல், சுமார் 50,000 பேர் வேலை இழந்துள் ளனர். எங்களுக்கு வேலை எங்கே என்ற முழக்கத்துடன் இளைஞர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.