india

img

ஏப்.27 முதல் இந்தியர்கள் மாலத்தீவுக்கு வர தடை!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக மோசமாக பரவி வருகிறது.
இந்நிலையில், இந்தியர்கள் மாலத்தீவுக்கு வர அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மாலத்தீவு வரும் இந்தியர்களுக்கு தங்களது தீவுகளில் தங்குவதற்கோ சுற்றிப் பார்ப்பதற்கோ அனுமதியில்லை. இத்தனை காலமாக எங்களுக்கு அளித்து வந்த ஆதரவுக்கு நன்றி. எங்களுடைய சுற்றுலாவை மேலும் பாதுகாக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிரமங்களுக்கு வருந்துகிறோம்" எனத் தெரிவித்துள்ளது.

;